Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
பாகற்காய் புளிக்குழம்பு
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சத்தான காய்கறியாகும். இதற்கு அதில் உள்ள கசப்புத்தன்மை காரணமாக இருக்கலாம். இருப்பினும் இதனை பொரியல் செய்தால் யாரும் சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் பொரியல் செய்தால் கசப்புத்தன்மை அப்படியே தெரியும். ஆனால் அதனை புளிக்குழம்பு செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படி பாகற்காயை வதக்கி பின் குழம்பு செய்தால், அதன் கசப்புத்தன்மை தெரியாது. சரி இப்போது பாகற்காய் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 1 (வட்டமாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 1/4 கப்
தக்காளி - 1 (அரைத்தது)
புளி - 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்ழுன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
வெந்தயப் பொடி - 1/2 டீஸ்பூன்
சோம்பு பொடி - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாகற்காய் சேர்த்து நன்கு வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் மசாலா பொடி அனைத்தையும் சேர்த்து வதக்கி, பின் அரைத்த தக்காளியை ஊற்றி நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து, அதில் புளிச்சாறு ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட வேண்டும்.
பின்பு அதில் சர்க்கரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் வதக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து, 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், பாகற்காய் புளிக்குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications