Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
பீட்ரூட் மற்றும் பன்னீர் புலாவ்
காலையில் எப்போதுமே வெரைட்டி ரைஸ் தான் செய்வதற்கு சிறந்ததாக இருக்கும். அதிலும் எப்போதும் ஒரே மாதிரியான வெரைட்டி ரைஸ் செய்யாமல், சற்று வித்தியாசமாக பீட்ரூட் மற்றும் பன்னீர் புலாவ் ரெசிபியை ஒரு முறை முயற்சிக்கலாம். இந்த ரெசிபி அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவாக இருக்கும். அதிலும் இந்த மாதம் பீட்ரூட் அதிகம் கிடைக்கும் என்பதால், இந்த பீட்ரூட்டை உணவில் அதிகம் சேர்த்தால், உடலில் இரத்தம் நன்கு ஊறும்.
சரி, இப்போது அந்த பீட்ரூம் மற்றும் பன்னீர் புலாவ் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப் (ஊற வைத்தது)
பீட்ரூட் - 1 (துருவியது)
பன்னீர் - 100 கிராம் (துருவியது)
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
புதினா - 1/2 கப் (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு மற்றும் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்பு பீட்ரூட், பன்னீர் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி, கரம் மசாலா, புதினா மற்றும் உப்பு சேர்த்து பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.
பிறகு அரிசியைக் கழுவிப் போட்டு கிளறி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதிக்கும் போது, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பீட்ரூட் மற்றும் பன்னீர் புலாவ் ரெடி!!!



Click it and Unblock the Notifications











