Just In
- 52 min ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 1 hr ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 2 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 3 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ருசியான... அவரைக்காய் சாம்பார்
இதுவரை அவரைக்காய் பொரியல் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு சாம்பார் செய்து சாப்பிட்டதுண்டா? இல்லையா? அப்படியெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள அவரைக்காய் சாம்பாரை செய்து சுவைத்துப் பாருங்கள். இது முருங்கைக்காய் சாம்பாருக்கு சிறந்த மாற்றாக விளங்கும்.
சரி, இப்போது அந்த அவரைக்காய் சாம்பாரின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அவரைக்காய்
-
15
(நறுக்கியது)
துவரம்
பருப்பு
-
3/4
கப்
வெங்காயம்
-
1
(நறுக்கியது)
தக்காளி
-
1
(நறுக்கியது)
மஞ்சள்
தூள்
-
1/2
டீஸ்பூன்
சாம்பார்
தூள்
-
2
டீஸ்பூன்
புளிச்சாறு
-
1
டேபிள்
ஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
கொத்தமல்லி
-
சிறிது
தாளிப்பதற்கு...
எண்ணெய்
-
2
டீஸ்பூன்
கடுகு
-
1
டீஸ்பூன்
சீரகம்
-
1/2
டீஸ்பூன்
பெருங்காயத்
தூள்
-
1
சிட்டிகை
வரமிளகாய்
-
1
கறிவேப்பிலை
-
சிறிது
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சிறிது சேர்த்து 3 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி, பின் அவரைக்காயை போட்டு 4-5 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 4-5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். அவரைக்காய் வெந்ததும், அதில் புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, உப்பு சுவை பார்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால், அவரைக்காய் சாம்பார் ரெடி!!!