Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா கறி
நவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள், விரதத்தை முடித்து சமைத்து சாப்பிடும் போது, அத்துடன் உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா கறியும் உடன் செய்து, விரதத்தை முடிக்கலாம். ஏனெனில் இந்த ரெசிபியில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த ரெசிபியில் வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் செய்வதால், இது ஒரு சிறப்பான விரதத்தை முடிப்பதற்கு ஏற்ற ரெசிபி என்று சொல்லலாம்.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா கறியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கோப்தாவிற்கு...
பன்னீர் - 200 கிராம் (துருவியது)
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்தது)
பாதாம் பவுடர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்ழுன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
குழம்பிற்கு...
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
அரைத்த தக்காளி - 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கோப்தாவிற்கு...
முதலில் ஒரு பௌலில் எண்ணெயை தவிர்த்து, கோப்தாவிற்கு கொடுத்த மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை சிறு உருண்டைகளாக்கி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு 3-4 நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
குழம்பிற்கு...
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் இஞ்சி பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, சாட் மசாலா, மிளகு தூள், சோம்பு தூள், கரம் மசாலா ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து 3-4 நிமிடம் மிதமான தீயில் கிளறி விட வேண்டும்.
பின்னர் அதில் அரைத்த தக்காளி சேர்த்து சிறிது நேரம் கிளறி விட்டு, அதில் பாதாம் பவுடர், உப்பு சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பொரித்து வைத்துள்ள கோப்தாக்களை போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா கறி ரெடி!!!



Click it and Unblock the Notifications











