Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா கறி
நவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள், விரதத்தை முடித்து சமைத்து சாப்பிடும் போது, அத்துடன் உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா கறியும் உடன் செய்து, விரதத்தை முடிக்கலாம். ஏனெனில் இந்த ரெசிபியில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த ரெசிபியில் வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் செய்வதால், இது ஒரு சிறப்பான விரதத்தை முடிப்பதற்கு ஏற்ற ரெசிபி என்று சொல்லலாம்.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா கறியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கோப்தாவிற்கு...
பன்னீர் - 200 கிராம் (துருவியது)
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்தது)
பாதாம் பவுடர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்ழுன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
குழம்பிற்கு...
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
அரைத்த தக்காளி - 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கோப்தாவிற்கு...
முதலில் ஒரு பௌலில் எண்ணெயை தவிர்த்து, கோப்தாவிற்கு கொடுத்த மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை சிறு உருண்டைகளாக்கி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு 3-4 நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
குழம்பிற்கு...
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் இஞ்சி பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, சாட் மசாலா, மிளகு தூள், சோம்பு தூள், கரம் மசாலா ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து 3-4 நிமிடம் மிதமான தீயில் கிளறி விட வேண்டும்.
பின்னர் அதில் அரைத்த தக்காளி சேர்த்து சிறிது நேரம் கிளறி விட்டு, அதில் பாதாம் பவுடர், உப்பு சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பொரித்து வைத்துள்ள கோப்தாக்களை போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா கறி ரெடி!!!



Click it and Unblock the Notifications