Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
மணமணக்கும்... ருசியான... வெஜ் புலாவ்
இன்று உங்கள் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அந்த காய்கறிகளைக் கொண்டு வெஜ் புலாவ் செய்து கொடுங்கள்.
இன்று உங்கள் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அந்த காய்கறிகளைக் கொண்டு வெஜ் புலாவ் செய்து கொடுங்கள். வெஜ் புலாவ் செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மதிய உணவாக குழந்தைகளுக்கு காலை வேளையில் செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும். இந்த வெஜ் புலாவை மதிய வேளையிலும் சமைத்து சாப்பிடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

உங்களுக்கு வெஜ் புலாவ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1 1/2 கப்
காய்கறிகள்...
* காலிஃப்ளவர் - 1/2 கப்
* நறுக்கிய உருளைக்கிழங்கு - 1/2 கப்
* நறுக்கிய கேரட் - 1/4 கப்
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* குடைமிளகாய் - 1/4 கப்
பிற பொருட்கள்:
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு பல் - 4-5
* பச்சை மிளகாய் - 1-2
* நறுக்கிய கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* புதினா இலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 1/2 - 3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 3-4
* பட்டை - 1 இன்ச்
* அன்னாசிப்பூ - 1 துண்டு
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் ஒருமுறை அலச வேண்டும். பின் கழுவிய அரிசியில் நீரை ஊற்றி 20-30 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் அரிசியைக் கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கெட்டியான மற்றும் அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் விழுதை சேர்த்து சில நொடிகள் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியைப் போட்டு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரிசியைப் போடு 1-2 நிமிடம் வதக்கிய பின், நீரை ஊற்றி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறிவிட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, காற்றுப்புகாதவாறு மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து, நீர் வற்றும் வரை அரிசியை வேக வைக்க வேண்டும்.
* சாதம் நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, 5 நிமிடம் கழித்து கிளறி விட வேண்டும். இப்போது சுவையான வெஜ் புலாவ் தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications












