Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
திருநெல்வேலி ஸ்டைல் மோர் குழம்பு
கொளுத்தும் கோடை வெயிலுக்கு உடலுக்கு இதமாக இருக்கும்படியான ஒரு சைடு டிஷ் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் தயிர் மற்றும் வெள்ளைப் பூசணி உள்ளதா? அப்படியால் அந்த இரண்டையும் கொண்டு மோர் குழம்பு செய்யுங்கள். அதுவும் திருநெல்வேலி ஸ்டைலில் மோர் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
இந்த மோர் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கும். ஏனெனில் வெள்ளை பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. முக்கியமாக இந்த மோர் குழம்பு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு திருநெல்வேலி ஸ்டைல் மோர் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருநெல்வேலி ஸ்டைல் மோர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளை பூசணிக்காய் - 250 கிராம்
* புளி நீர் - 1/2 கப்
* தயிர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய் மசாலாவிற்கு...
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* சீரகம் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் மசாலாவிற்கு கொடுத்துள்ள உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து, அதை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்
* பின் அதே வாணலியில் துருவிய தேங்காயை சேர்த்து சில நொடிகள் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துண்டுகளாக்கி வைத்துள்ள வெள்ளைப் பூசணி, சிறிது உப்பு, மஞ்சள் தூள் 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தயிர், புளி நீர், வேக வைத்துள்ள வெள்ளைப் பூசணி, அரைத்த தேங்காய் விழுது மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் தாளித்ததை கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி, குழம்பை இன்னும் 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான திருநெல்வேலி ஸ்டைல் மோர் குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications