Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
ஈவ்னிங் நேரத்துல தேங்காய் வெச்சு இந்த மாதிரி பாயாசம் செய்யுங்க.. உடனே காலியாகும்...
Coconut Milk Payasam Recipe In Tamil: ஆடி மாதம் தொடங்கிவிட்டது. ஆடி மாதமானது அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்வதோடு, கூழ் அல்லது ஏதாவது சமைத்து அம்மனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
உங்கள் வீட்டில் ஆடி மாதத்தில் அடிக்கடி வடை, பாயாசத்துடன் சமைத்து சாப்பிடும் பழக்கம் இருந்தால், ஒருமுறை தேங்காய் பால் பாயாசத்தை செய்யுங்கள். இந்த தேங்காய் பாயாசத்தை மாலை வேளையில் கூட காபி, டீ-க்கு பதிலாக செய்து குடிக்கலாம். இந்த பாயாசம் அவ்வளவு சுவையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பால் பாயாசத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
* ஏலக்காய் - 3
* தண்ணீர் - 2 1/4 கப்
* வெல்லம் - 3/4 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* முந்திரி - சிறிது
* உலர் திராட்சை - சிறிது
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின்
அதில் சிறிது நீரை ஊற்றி அரிசியை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்ததும், மிக்சர் ஜாரில் ஊற வைத்த அரிசியை நீருடன்
சேர்த்து, அதில் 1 கப் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து,
1/4 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியில் அரைத்த தேங்காயை ஊற்றி, அதில் 2 கப் நீரை
ஊற்றி மிதமான தீயில் வைத்து, 3-5 நிமிடம் கைவிடாமல் கிளறி விட
வேண்டும்.
* தேங்காய் சற்று கெட்டியாகத் தொடங்கும் போது, அதில் வெல்லத்தை
சேர்த்து நன்கு கிளறி, 3-5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க
வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து
இறக்கி, கொதித்துக் கொண்டிருக்கும் பாயாசத்துடன் சேர்த்து கிளறி
பாயாசத்தை இறக்கினால், சுவையான தேங்காய் பால் பாயாசம் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications










