Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
ஈவ்னிங் நேரத்துல தேங்காய் வெச்சு இந்த மாதிரி பாயாசம் செய்யுங்க.. உடனே காலியாகும்...
Coconut Milk Payasam Recipe In Tamil: ஆடி மாதம் தொடங்கிவிட்டது. ஆடி மாதமானது அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்வதோடு, கூழ் அல்லது ஏதாவது சமைத்து அம்மனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
உங்கள் வீட்டில் ஆடி மாதத்தில் அடிக்கடி வடை, பாயாசத்துடன் சமைத்து சாப்பிடும் பழக்கம் இருந்தால், ஒருமுறை தேங்காய் பால் பாயாசத்தை செய்யுங்கள். இந்த தேங்காய் பாயாசத்தை மாலை வேளையில் கூட காபி, டீ-க்கு பதிலாக செய்து குடிக்கலாம். இந்த பாயாசம் அவ்வளவு சுவையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பால் பாயாசத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
* ஏலக்காய் - 3
* தண்ணீர் - 2 1/4 கப்
* வெல்லம் - 3/4 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* முந்திரி - சிறிது
* உலர் திராட்சை - சிறிது
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின்
அதில் சிறிது நீரை ஊற்றி அரிசியை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்ததும், மிக்சர் ஜாரில் ஊற வைத்த அரிசியை நீருடன்
சேர்த்து, அதில் 1 கப் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து,
1/4 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியில் அரைத்த தேங்காயை ஊற்றி, அதில் 2 கப் நீரை
ஊற்றி மிதமான தீயில் வைத்து, 3-5 நிமிடம் கைவிடாமல் கிளறி விட
வேண்டும்.
* தேங்காய் சற்று கெட்டியாகத் தொடங்கும் போது, அதில் வெல்லத்தை
சேர்த்து நன்கு கிளறி, 3-5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க
வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து
இறக்கி, கொதித்துக் கொண்டிருக்கும் பாயாசத்துடன் சேர்த்து கிளறி
பாயாசத்தை இறக்கினால், சுவையான தேங்காய் பால் பாயாசம் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications








