Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
வெங்காயம், தக்காளி, தேங்காய்-ன்னு எதுவும் சேர்க்காத தண்ணி சட்னி - எப்படி செய்யணும் தெரியுமா?
No Onion No Tomato No Coconut Thanni Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அதற்கு எப்போதும் சட்னியை தான் அதிகம் செய்வீர்களா? பொதுவாக சட்னி செய்ய வெங்காயம், தக்காளி, தேங்காய் போன்றவற்றில் ஏதாவது ஒன்று அவசியம் தேவைப்படும்.
ஆனால் இந்த மூன்றும் இல்லாமலேயே ஒரு அருமையான சட்னியை செய்யலாம் தெரியுமா? இந்த சட்னியில் நீரை ஊற்றி தண்ணி சட்னி போன்று செய்து, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியில் பருப்புகள் அதிகம் சேர்ப்பதால், புரோட்டீன் அதிகம் நிறைந்த சட்னி.

உங்களுக்கு இந்த வெங்காயம் தக்காளி தேங்காய் சேர்க்காத தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம் தக்காளி தேங்காய் சேர்க்காத தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 8 பல்
* பச்சை வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் பச்சை வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு
நிறம் மாற வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொட்டுக்கடலையை சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் புளி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிறிது நீரை ஊற்றி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, தண்ணி சட்னிக்கு
தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான வெங்காயம்,
தக்காளி, தேங்காய் சேர்க்காத தண்ணி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications