Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!!

தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்
சேமியா - 50 கிராம்
ஏலக்காய் - 4
பாசிப்பயறு - ஒரு கைப்பிடி
சர்க்கரை - 2 கப்
முந்திரி - 10
பாதாம் - 10
உலர் திராட்சை - 10
குங்குமப்பூ - சிறிது
நெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு வாணலியில் தண்ணீர் விட்டு, தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் சேமியாவை சேர்த்து, ஓரளவு வேக வைக்கவும். பின் அந்த சேமியாவில் உள்ள நீரை வடித்து விடவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பாசிப்பயறு போட்டு நன்கு வறுத்து எடுத்துக் கொண்டு, அதை மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய்யை ஊற்றி, காய்ந்ததும் அதில் முந்திரி, உலர் திராட்சை மற்றும் பாதாம் சேர்த்து நன்று பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை விட்டு, அதில் ஏலக்காயை நன்கு தட்டி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். பாலானது நன்கு கொதித்ததும் அதில் சர்க்கரையை போட்டு, சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும். பின்பு அதில் குங்குமப்பூவை சேர்த்து, தீயை சிம்மில் 2 நிமிடம் வைக்கவும்.
பிறகு அதில் சேமியா மற்றும் அரைத்து வைத்துள்ள பாசிப்பயறு பொடியை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
பின் அதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் பாதாமை சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
இப்போது வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற சுவையான பால் பாயாசம் ரெடி!!!



Click it and Unblock the Notifications