Latest Updates
-
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இந்தியன் ஸ்டைல்: எஸ்பிரசோ காபி
காபியில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அத்தகைய காபியில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டுமே அடங்கியுள்ளன. அதிலும் பெரும்பாலானோர் காபி குடிப்பது தீமை என்று மட்டும் தான் நினைக்கின்றனர். ஆனால் அந்த காபியை காலையில் எழுந்ததும் குடித்தால், உடல் புத்துணர்ச்சி பெறும்.
குறிப்பாக காபியை அளவுக்கு அதிகமாக குடித்தால் மட்டும் தான், உடலுக்கு தீங்கு விளையுமே தவிர, அளவாக பருகினால் நன்மை கிட்டும். இப்போது அந்த காபியில் ஒரு வகையான எஸ்பிரசோ காபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
காபி பவுடர் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பால் - 1 கப்
சுடுநீர் - 1 டேபிள் ஸ்பூன்
சாக்லெட் பவுடர் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு கப்பில் காபி பவுடர் மற்றும் சர்க்கரையைப் போட்டு, சிறிது சுடுநீர் ஊற்றி, ஸ்பூன் கொண்டு பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் பாலை நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை அந்த கப்பில் சற்று மேலே தூக்கி நுரை வருமாறு ஊற்ற வேண்டும்.
இறுதியில் அதில் சாக்லெட் பவுடர் தூவினால், சூப்பரான எஸ்பிரசோ காபி ரெடி!!! இதனை காலையில் குடித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.



Click it and Unblock the Notifications