Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
இந்தியன் ஸ்டைல்: எஸ்பிரசோ காபி
காபியில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அத்தகைய காபியில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டுமே அடங்கியுள்ளன. அதிலும் பெரும்பாலானோர் காபி குடிப்பது தீமை என்று மட்டும் தான் நினைக்கின்றனர். ஆனால் அந்த காபியை காலையில் எழுந்ததும் குடித்தால், உடல் புத்துணர்ச்சி பெறும்.
குறிப்பாக காபியை அளவுக்கு அதிகமாக குடித்தால் மட்டும் தான், உடலுக்கு தீங்கு விளையுமே தவிர, அளவாக பருகினால் நன்மை கிட்டும். இப்போது அந்த காபியில் ஒரு வகையான எஸ்பிரசோ காபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
காபி பவுடர் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பால் - 1 கப்
சுடுநீர் - 1 டேபிள் ஸ்பூன்
சாக்லெட் பவுடர் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு கப்பில் காபி பவுடர் மற்றும் சர்க்கரையைப் போட்டு, சிறிது சுடுநீர் ஊற்றி, ஸ்பூன் கொண்டு பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் பாலை நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை அந்த கப்பில் சற்று மேலே தூக்கி நுரை வருமாறு ஊற்ற வேண்டும்.
இறுதியில் அதில் சாக்லெட் பவுடர் தூவினால், சூப்பரான எஸ்பிரசோ காபி ரெடி!!! இதனை காலையில் குடித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.



Click it and Unblock the Notifications