Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இனிப்பான... தேங்காய் கச்சோரி
வார இறுதியில் வீட்டில் இருக்கும் போது, ஏதேனும் சற்று வித்தியாசமான டிஸ் அல்லது ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதுவும் மாலை நேரத்தில் இனிப்பான ஸ்நாக்ஸ் என்றால் அனைவருமே விரும்பி சாப்பிடுவர். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு தேங்காய் கச்சோரி தான் மிகவும் சிறந்தது. அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மைதா - 5 கப்
தேங்காய் - 2 கப் (துருவியது)
ஏலக்காய் - 2
இலவங்கப்பட்டை - 2
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஏலக்காய் மற்றும் பட்டையை நன்கு பொடி செய்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, நெய், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, மென்மையாக சப்பாத்தி மாவைப் போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு மற்றொரு சிறு பாத்திரத்தில் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய், பட்டை பொடியை கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின் பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவை சிறு உருண்டைகளாக செய்து, அதில் கட்டை விரளால் சிறு ஓட்டை போட்டு, அதில் சிறிது இந்த தேங்காய் கலவையை வைத்து மூடி வைக்கவும். இதேப் போல் அனைத்து மாவுகளையும் செய்ய வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் இந்த உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான தேங்காய் கச்சோரி ரெடி!!!



Click it and Unblock the Notifications











