Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
இனிப்பான... தேங்காய் கச்சோரி
வார இறுதியில் வீட்டில் இருக்கும் போது, ஏதேனும் சற்று வித்தியாசமான டிஸ் அல்லது ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதுவும் மாலை நேரத்தில் இனிப்பான ஸ்நாக்ஸ் என்றால் அனைவருமே விரும்பி சாப்பிடுவர். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு தேங்காய் கச்சோரி தான் மிகவும் சிறந்தது. அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மைதா - 5 கப்
தேங்காய் - 2 கப் (துருவியது)
ஏலக்காய் - 2
இலவங்கப்பட்டை - 2
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஏலக்காய் மற்றும் பட்டையை நன்கு பொடி செய்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, நெய், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, மென்மையாக சப்பாத்தி மாவைப் போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு மற்றொரு சிறு பாத்திரத்தில் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய், பட்டை பொடியை கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின் பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவை சிறு உருண்டைகளாக செய்து, அதில் கட்டை விரளால் சிறு ஓட்டை போட்டு, அதில் சிறிது இந்த தேங்காய் கலவையை வைத்து மூடி வைக்கவும். இதேப் போல் அனைத்து மாவுகளையும் செய்ய வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் இந்த உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான தேங்காய் கச்சோரி ரெடி!!!



Click it and Unblock the Notifications