Latest Updates
-
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
தண்டை: வட இந்திய ஸ்பெஷல் பானம்
தண்டை என்பது வட இந்திய பானம். பொதுவாக இந்த பானத்தை மகாசிவராத்திரி மற்றும் ஹோலி நாட்களில் செய்வார்கள். மேலும் இந்த பானம் கோடையில் செய்து குடிப்பதற்கு ஏற்ற ஒன்று. இது புத்துணர்ச்சியூட்டும் மிகவும் சிறப்பான பானம்.
சரி, இப்போது அந்த வட இந்திய ஸ்பெஷல் பானமான தண்டை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர் (2 கப்)
சர்க்கரை - 1 1/2 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
ரோஸ் எசன்ஸ் - 2 துளிகள்
பேஸ்ட் செய்வதற்கு...
பாதாம் - 20
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகு - 10
செய்முறை:
முதலில் பேஸ்ட் செய்ய கொடுத்துள்ள பொருட்களை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்குள் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடேற்றி இறக்கி குளிர வைத்து, சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு டேபிள் ஸ்பூன் பாலை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் குங்குமப்பூ சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின் அதில் இருந்து 1 டீஸ்பூன் குங்குமப்பூ பாலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஊற வைத்துள்ள பேஸ்ட் பொருட்களில் இருக்கும் பாதாமின் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை பாலில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் அதில் மீதமுள்ள குங்குமப்பூ பாலை ஊற்றி வடிகட்டி, 2 துளிகள் ரோஸ் எசன்ஸ் கலந்து 1 மணிநேரம் கழித்து பரிமாறினால், தண்டை ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications