Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
கருப்பு சுண்டல் ரெசிபி
சுண்டலில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்திருப்பதால், இதனை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது. அதிலும் ஒல்லியாக இருக்கும் குழந்தைகளுக்கு இதனை கொடுப்பது மிகவும் சிறந்தது. இங்கு சுண்டலை குழந்தைகளுக்கு எப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் என்பது கொடுக்கப்பட்டுள்ளது.
அதனைப் படித்து, அதன் படி குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்:
கருப்பு சுண்டல் - 1 கப்
தண்ணீர் - 3 கப்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கருப்பு சுண்டலை நீரில் 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
குக்கரில் உள்ள விசிலானது போனதும், அதில் உள்ள நீரை வடித்து, தனியாக சுண்டலை வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்துள்ள சுண்டலை சேர்த்து 4-5 நிமிடம் கிளறி விட்டு, பின் அதில் துருவி வைத்துள்ள தேங்காய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 5-6 நிமிடம் கிளறி இறக்கினால், சுண்டல் ரெசிபி ரெடி!!!



Click it and Unblock the Notifications