Latest Updates
-
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
கடலை பருப்புடன், இந்த 4 பொருளை சேர்த்து அரைச்சா போதும்.. இட்லி, தோசைக்கு அருமையான சட்னி ரெடி!
Chana Dal Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலையில் இட்லி, தோசை செய்யும் போது, என்ன சட்னி செய்வதென்று யோசிப்பதே பெரிய வேலையாக உள்ளதா? உங்களின் வேலையை குறைக்கத் தான் நாங்கள் தினமும் உங்களுக்காக ஐடியாவைக் கொடுக்கும் வகையில் காலையில் ஒரு சைடு டிஷ் ரெசிபியைப் போடுகிறோம்.
இன்று உங்கள் வீட்டில் செய்யும் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்யலாம் என்றால், கடலைப் பருப்பு சட்னியை செய்யுங்கள். இந்த கடலைப் பருப்பு சட்னி, இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபம் மற்றும் குறைவான பொருட்கள் இருந்தாலே போதுமானது.

உங்களுக்கு கடலைப் பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப் பருப்பு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப் பருப்பு - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 3 பல்
* புளி - 1 துண்டு
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து மிதமான தீயில்
வைத்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் வரமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு
சேர்த்து வதக்கி இறக்கி, அவற்றையும் குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த வரமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு,
கடலைப் பருப்பு, துருவிய தேங்காய், புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு
கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வரமிகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள்
வதக்கி இறக்கி சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கடலைப்பருப்பு
சட்னி தயார்.
Image Courtesy: indianveggiedelight



Click it and Unblock the Notifications