Latest Updates
-
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா?
1 பச்சரிசி வெச்சு.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. மொறுமொறுன்னு செம சூப்பரா இருக்கும்...
Sel Roti Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சரிசி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு பாரம்பரிய நேபாள ஸ்நாக்ஸை செய்து கொடுங்கள். இதன் பெயர் செல் ரொட்டி.
இந்த செல் ரொட்டி அளவான இனிப்புடன், மொறுமொறுவென்று இருக்கும். முக்கியமாக இதன் வடிவம் வளையம் போன்று இருப்பதால், பார்த்ததும் சாப்பிட தோன்றும். ஒருமுறை குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு செல் ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செல் ரொட்டி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
* நெய் - 4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில்
சுத்தமான நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, பச்சரிசியை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் 4
டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 4 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, 2
டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாவின் பதம் என்றால், கரண்டியில் எடுத்து மாவை ஊற்றும் போது, அது
மிகவும் இறுக்கமாக இல்லாமல், எளிதில் விழ வேண்டும்.
* ஒருவேளை மாவு கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து
கொள்ளுங்கள். உடனே சுடுவதாக இருந்தால், அத்துடன் 1 சிட்டிகை ஆப்ப
சோடாவை சேர்த்து கலந்து கொள்ளலாம். ஆப்பசோடா சேர்க்க விருப்பம்
இல்லாவிட்டால், 2 மணிநேரம் ஊற வைத்து பின் சுட வேண்டும்.
* இறுதியாக ஒரு தட்டையான வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை ஒரு கரண்டியில் எடுத்து, வளையம் போன்று ஊற்றிக்
கொண்டு, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான
செல் ரொட்டி தயார்.



Click it and Unblock the Notifications