Just In
- 7 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 8 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 11 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 12 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
சைனீஸ் ரெசிபியான சீசுவான் பன்னீர் எப்படி செய்யணும் தெரியுமா?
எப்போதும் பஜ்ஜி, போண்டா செய்து அலுத்துப் போயிருந்தால், வீட்டில் பன்னீர் இருந்தால், அந்த பன்னீரைக் கொண்டு இன்று சீசுவான் பன்னீர் செய்யுங்கள்.
குளிர்காலத்தில் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது காரமாகவும், சூடாகவும் ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். எப்போதும் பஜ்ஜி, போண்டா செய்து அலுத்துப் போயிருந்தால், வீட்டில் பன்னீர் இருந்தால், அந்த பன்னீரைக் கொண்டு இன்று சீசுவான் பன்னீர் செய்யுங்கள். இது ஒரு இண்டோ-சைனீஸ் ரெசிபி. இது சீசுவான் சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து, குடைமிளகாய் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு சுவையான ஸ்டாட்டர். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது நாண், ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
உங்களுக்கு சீசுவான் பன்னீர் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சீசுவான் பன்னீர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம்
* குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் - 1/8 டீஸ்பூன்
* சீசுவான் சாஸ் - 1/8 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்
* வெள்ளை ஸ்பிரிங் ஆனியன் - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை ஸ்பிரிங் ஆனியன் - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
ஊற வைப்பதற்கு...
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* மைதா - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - பேஸ்ட் செய்ய தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை எடுத்து, நீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக ப்ரை செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஸ்பிரின் ஆனியனின் வெள்ளை மற்றும் பச்சை பகுதிகளை சேர்த்து, இஞ்சி பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் ப்ரை செய்ய வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின் சோள மாவை சிறிது நீரில் கலந்து, அதை வாணலியில் உள்ள சாஸ் உடன் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் ப்ரை செய்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான சீசுவான் பன்னீர் தயார்.
குறிப்பு:
* உங்களிடம் சீசுவான் சாஸ் இல்லாவிட்டால், வரமிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் சிறிது பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் ஸ்ப்ரிங் ஆனியனை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கினால், சீசுவான் சாஸ் தயார்.
* பன்னீரை பேனில் ப்ரை செய்யலாம் அல்லது ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெயில் பன்னீர் துண்டுகளைப் போட்டும் ப்ரை செய்யலாம்.
Image Courtesy: sharmispassions