Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
ரோட்டுக்கடை வெங்காய சட்னி அவ்வளோ ருசியா இருக்க இந்த 3 பொருள் தான் காரணம்.. அது என்னென்ன-ன்னு பாருங்க..
Rottukadai Vengaya Chutney Recipe In Tamil: இட்லி, தோசைக்கு வீட்டில் எத்தனை சட்னியை செய்தாலும், ரோட்டுக்கடையில் கொடுக்கப்படும் சட்னிக்கு இணையாக வராது. அதுவும் ரோட்டுக்கடை வெங்காய சட்னியை எடுத்துக் கொண்டால், சுவை வேற லெவலில் இருக்கும்.
என்ன தான் அந்த சட்னியை வீட்டில் செய்தாலும், அந்த சுவை வராது. ஏனெனில் ரோட்டுக்கடை வெங்காய சட்னி ருசியாக இருக்க, 3 பொருள் ரகசியமாக சேர்க்கப்படுகிறது. அது தான் சீரகம், தக்காளி, புதினா. இந்த மூன்றையும் அளவாக சேர்த்து வந்தால், சட்னியின் சுவையே தனி தான்.

உங்களுக்கு ரோட்டுக்கடை வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* சின்ன வெங்காயம் - 15
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* வரமிளகாய் - 6
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - 1/2 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
* பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின் அதில் பூண்டு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் சேர்த்து,
அத்துன் வரமிளகாயையும் சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் 1/4 டீஸ்பூன் சீரகம், தக்காளி மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புதினா, கொத்தமல்லியை சேர்த்து இலைகள் சுருங்கும் வரை
வதக்கி, அத்துடன் பொட்டுக்கடலை மற்றும் புளியை சேர்த்து, நன்கு வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத்
தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான ரோட்டுக்கடை வெங்காய சட்னி தயார்.
Image Courtesy: Cook with Sangeetha



Click it and Unblock the Notifications











