Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
வீட்டுல இட்லி, தோசை மாவு இல்லையா? 1 கப் ரவை இருந்தா.. இப்படி பன் தோசை செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்...
Rava Masala Bun Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் டிபன் செய்ய இட்லி, தோசை மாவு எதுவும் இல்லையா? உப்புமா செய்யலாம் என்றால், வீட்டில் உள்ளவர்கள் ஓடிவிடுவார்களா? உங்கள் வீட்டில் 1 கப் ரவையும், சிறிது காய்கறிகளும் உள்ளதா? அப்படியானால், அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ரவா மசாலா பன் தோசையை செய்து கொடுங்கள்.
இந்த பன் தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். அதோடு, இந்த பன் தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை சரியான காம்பினேஷனாக இருக்கும். ஒருமுறை இந்த பன் தோசையை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு ரவா மசாலா பன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா மசாலா பன் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* கோதுமை மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 1 (துருவியது)
* சிறிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சிறிய உருளைக்கிழங்கு - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
மேலே தூவுவதற்கு...
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்து, அதில் ரவை மூழ்கும்
அளவில் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, ரவையை நன்கு கரண்டியால் கிளறி விட்டு, அதில்
கோதுமை மாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பின் அதில் தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு
கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காய், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய
தக்காளி மற்றும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து, பின் பொடியாக
நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு
கிளறி விட்டு, 5 நிமிடம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குழம்பு மிளகாய்
தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை 1 கரண்டி ஊற்றி, அதன்
மேல் கலந்து வைத்துள்ள வெங்காயத்தை மேலே தூவி, குறைவான தீயில் வைத்து
மூடி வைத்து, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதை பிரட்டி போட்டு சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். இப்படி
பொன்னிறமாகி நன்கு வேகும் வரை பிரட்டி போட்டு வேக வைத்து எடுத்தால்,
சுவையான ரவா மசாலா பன் தோசை தயார்.



Click it and Unblock the Notifications









