Just In
- 1 hr ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 7 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 8 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 8 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ருசியான... பஞ்சாபி சமோசா
சமோசாவை செய்யத் தெரிந்தால், வீட்டிலேயே எவ்வளவு வேண்டுமானாலும் செய்து சுவைக்கலாம் அல்லவா? உங்களுக்கு பஞ்சாபி சமோசாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
பொதுவாக பலருக்கு மாலை வேளையில் சமோசா சாப்பிட பிடிக்கும். சிலர் இதற்காகவே மாலையில் கடைக்கு சென்று வாங்கி சாப்பிடுவர். ஆனால் அந்த சமோசாவை செய்யத் தெரிந்தால், வீட்டிலேயே எவ்வளவு வேண்டுமானாலும் செய்து சுவைக்கலாம் அல்லவா? உங்களுக்கு பஞ்சாபி சமோசாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.
கீழே பஞ்சாபி சமோசாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1 கப்
* ஓமம் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது மற்றும் மசித்தது)
* பட்டாணி - 1 கப் (வேக வைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* சாட் மசாலா - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, ஓமம், உப்பு, எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நீர் ஊற்றி, பூரி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, தட்டு கொண்டு மூடி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
* பின்பு அதில் பட்டாணி மற்றும் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கி குளிர வைக்கவும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். அதே சமயம் உருளைக்கிழங்கு மசாலாவையும் சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
* பின் ஒரு மைதா மாவு உருண்டையை எடுத்து வட்டமாக தேய்த்து, கத்தியால் அரை வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
* இப்போது ஒரு அரை வட்ட மைதா மாவை எடுத்து, அதன் முனைகளில் நீரை தடவிக் கொண்டு, பின் ஒரு உருளைக்கிழங்கு உருண்டையை மைய பகுதியில் வைத்து, சமோசா வடிவில் மடித்துக் கொள்ளவும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ளவும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் தயாரித்து வைத்துள்ள சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பஞ்சாபி சமோசா ரெடி!