Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
ருசியான... பஞ்சாபி சமோசா
சமோசாவை செய்யத் தெரிந்தால், வீட்டிலேயே எவ்வளவு வேண்டுமானாலும் செய்து சுவைக்கலாம் அல்லவா? உங்களுக்கு பஞ்சாபி சமோசாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
பொதுவாக பலருக்கு மாலை வேளையில் சமோசா சாப்பிட பிடிக்கும். சிலர் இதற்காகவே மாலையில் கடைக்கு சென்று வாங்கி சாப்பிடுவர். ஆனால் அந்த சமோசாவை செய்யத் தெரிந்தால், வீட்டிலேயே எவ்வளவு வேண்டுமானாலும் செய்து சுவைக்கலாம் அல்லவா? உங்களுக்கு பஞ்சாபி சமோசாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

கீழே பஞ்சாபி சமோசாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1 கப்
* ஓமம் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது மற்றும் மசித்தது)
* பட்டாணி - 1 கப் (வேக வைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* சாட் மசாலா - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, ஓமம், உப்பு, எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நீர் ஊற்றி, பூரி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, தட்டு கொண்டு மூடி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
* பின்பு அதில் பட்டாணி மற்றும் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கி குளிர வைக்கவும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். அதே சமயம் உருளைக்கிழங்கு மசாலாவையும் சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
* பின் ஒரு மைதா மாவு உருண்டையை எடுத்து வட்டமாக தேய்த்து, கத்தியால் அரை வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
* இப்போது ஒரு அரை வட்ட மைதா மாவை எடுத்து, அதன் முனைகளில் நீரை தடவிக் கொண்டு, பின் ஒரு உருளைக்கிழங்கு உருண்டையை மைய பகுதியில் வைத்து, சமோசா வடிவில் மடித்துக் கொள்ளவும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ளவும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் தயாரித்து வைத்துள்ள சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பஞ்சாபி சமோசா ரெடி!



Click it and Unblock the Notifications