Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ருசியான... பஞ்சாபி சமோசா
சமோசாவை செய்யத் தெரிந்தால், வீட்டிலேயே எவ்வளவு வேண்டுமானாலும் செய்து சுவைக்கலாம் அல்லவா? உங்களுக்கு பஞ்சாபி சமோசாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
பொதுவாக பலருக்கு மாலை வேளையில் சமோசா சாப்பிட பிடிக்கும். சிலர் இதற்காகவே மாலையில் கடைக்கு சென்று வாங்கி சாப்பிடுவர். ஆனால் அந்த சமோசாவை செய்யத் தெரிந்தால், வீட்டிலேயே எவ்வளவு வேண்டுமானாலும் செய்து சுவைக்கலாம் அல்லவா? உங்களுக்கு பஞ்சாபி சமோசாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

கீழே பஞ்சாபி சமோசாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1 கப்
* ஓமம் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது மற்றும் மசித்தது)
* பட்டாணி - 1 கப் (வேக வைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* சாட் மசாலா - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, ஓமம், உப்பு, எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நீர் ஊற்றி, பூரி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, தட்டு கொண்டு மூடி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
* பின்பு அதில் பட்டாணி மற்றும் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கி குளிர வைக்கவும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். அதே சமயம் உருளைக்கிழங்கு மசாலாவையும் சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
* பின் ஒரு மைதா மாவு உருண்டையை எடுத்து வட்டமாக தேய்த்து, கத்தியால் அரை வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
* இப்போது ஒரு அரை வட்ட மைதா மாவை எடுத்து, அதன் முனைகளில் நீரை தடவிக் கொண்டு, பின் ஒரு உருளைக்கிழங்கு உருண்டையை மைய பகுதியில் வைத்து, சமோசா வடிவில் மடித்துக் கொள்ளவும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ளவும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் தயாரித்து வைத்துள்ள சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பஞ்சாபி சமோசா ரெடி!



Click it and Unblock the Notifications







