Latest Updates
-
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க!
புளியும், வரமிளகாயும் இருந்தா போதும்... 5 நிமிடத்தில் இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி செய்யலாம்..
Tamarind Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? 5 நிமிடத்தில் ஒரு சுவையான சட்னியை செய்ய வேண்டுமா?
அப்படியானால் புளி மற்றும் வரமிளகாய் கொண்டு சுவையான சட்னியை செய்யுங்கள். இந்த புளி சட்னி புளிப்பு, இனிப்பு, காரம் என அனைத்து சுவையும் கலந்திருப்பதால், இட்லியுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சட்னி 5 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு புளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 5-6
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* சுடுநீர்
* சின்ன வெங்காயம் - 25
* பூண்டு - 15 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வரமிளகாய் மற்றும் புளியை சுடுநீரில் 10 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு
பற்களை சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த வெங்காய பூண்டு விழுதை சேர்த்து மிதமான
தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் ஊற வைத்த வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த புளியை சேர்த்து நன்கு கிளறி, எண்ணெய் பிரியும்
வரை வதக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான புளி
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











