Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?
புளியும், வரமிளகாயும் இருந்தா போதும்... 5 நிமிடத்தில் இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி செய்யலாம்..
Tamarind Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? 5 நிமிடத்தில் ஒரு சுவையான சட்னியை செய்ய வேண்டுமா?
அப்படியானால் புளி மற்றும் வரமிளகாய் கொண்டு சுவையான சட்னியை செய்யுங்கள். இந்த புளி சட்னி புளிப்பு, இனிப்பு, காரம் என அனைத்து சுவையும் கலந்திருப்பதால், இட்லியுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சட்னி 5 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு புளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 5-6
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* சுடுநீர்
* சின்ன வெங்காயம் - 25
* பூண்டு - 15 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வரமிளகாய் மற்றும் புளியை சுடுநீரில் 10 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு
பற்களை சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த வெங்காய பூண்டு விழுதை சேர்த்து மிதமான
தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் ஊற வைத்த வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த புளியை சேர்த்து நன்கு கிளறி, எண்ணெய் பிரியும்
வரை வதக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான புளி
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
