Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
பூண்டு மிளகாய் சட்னி
இன்று காலை உணவாக உங்கள் வீட்டில் இட்லி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக என்ன சட்னி செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? வெறும் தேங்காய் சட்னி செய்ய நினைத்தால், அத்துடன் பூண்டு மிளகாய் சட்னியையும் செய்யுங்கள்.
இன்று காலை உணவாக உங்கள் வீட்டில் இட்லி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக என்ன சட்னி செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வெறும் தேங்காய் சட்னி செய்ய நினைத்திருந்தால், அத்துடன் சேர்த்து பூண்டு மிளகாய் சட்னியையும் செய்யுங்கள். இந்த பூண்டு மிளகாய் சட்னி செய்வது மிகவும் சுலபம். அதோடு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பூண்டு மிளகாய் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு மிளகாய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அடிதப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 5
* பூண்டு - 10 பல்
* வரமிளகாய் - 5
* காஷ்மீரி மிளகாய் - 5
* புளி - 1 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, 2-3 நிமிடம் அல்லது அடர் சிவப்பு நிறத்தில் மாறும் வரை வதக்கி இறக்கினால், சுவையான பூண்டு மிளகாய் சட்னி தயார்.
குறிப்பு:
* வதக்கி அரைத்து தாளித்த பின் சட்னியை நீண்ட நேரம் வேக வைக்கக்கூடாது.
* இந்த சட்னிக்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்தினால், அது இந்த சட்னிக்கு நல்ல ப்ளேவரைக் கொடுக்கும். எக்காரணம் கொண்டும் நல்லெண்ணெயின் அளவைக் குறைத்துவிட வேண்டாம். இல்லாவிட்டால், சட்னி பச்சை வாசனையுடன் இருக்கும்.
* நல்லெண்ணெய் நல்ல சுவையைக் கொடுப்பதோடு, காரத்தை கட்டுப்பாட்டில் வைக்கும். கூடுதலாக தாளிக்கும் போது கடுகுடன், சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* சட்னியின் நிறம் அதற்கு பயன்படுத்தும் வரமிளகாய் வகையைப் பொறுத்தது. இந்த சட்னியில் பாதி வரமிளகாயும், பாதி காஷ்மீரி வரமிளகாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் காஷ்மீரி வரமிளகாய் நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











