Latest Updates
-
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இட்லி, தோசைக்கு ஒருமுறை இந்த 4 பொருளை மட்டும் வெச்சு சட்னி செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
Poondu Kara Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பெரும்பாலும் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசைக்கு காரமாகவும், புளிப்பாகவும் சட்னி இருக்க வேண்டுமென விரும்புவார்களா? அப்படியானால் வீட்டில் பூண்டுடன், சின்ன வெங்காயம், வரமிளகாய், புளி இருந்தால் போதும், இவற்றைக் கொண்டு அற்புதமான சுவையில் சட்னியை செய்யலாம்.
இந்த பூண்டு கார சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த சட்னியில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால், இந்த சட்னி 2-3 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும். இந்த பூண்டு கார சட்னி ஆரோக்கியமான சட்னி என்றும் கூறலாம்.

ஏனெனில் இதில் பூண்டு அதிகமாக சேர்க்கப்படுகிறது. பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அடிக்கடி பூண்டை உணவில் சேர்க்கும் போது, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும், உடல் எடை குறையும், இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியும் வலுபெறும். முக்கியமாக இந்த சட்னி 10 நிமிடத்திலேயே செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு பூண்டு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கார சட்னி ரெசியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 25 பல்
* சின்ன வெங்காயம் - 25
* புளி - 1 எலுமிச்சை அளவு
* வரமிளகாய் - 20
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வரமிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம்
மற்றும் புளி சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அப்படி கிளறி விடும் போது, அவ்வப்போது நல்லெண்ணெய் சேர்த்து கிளறி
விட வேண்டும். ஒரு கட்டத்தில் சட்னியானது சட்டியில் ஒட்டாமல் திரண்டு
வரும், அது தான் சரியான பதம். இந்த கட்டத்தில் அடுப்பை அணைத்து
விட்டால், சுவையான பூண்டு கார சட்னி தயார்.
Image Courtesy: Jeyashri's Kitchen



Click it and Unblock the Notifications