Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
பாசிப்பருப்பு வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு பொருத்தமா இருக்கும்..
Idli Sambar Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று சாம்பார் செய்யுங்கள். அதுவும் பாசிப்பருப்பைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள். இந்த பாசிப்பருப்பு சாம்பார் இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் பொருத்தமாக இருக்கும். முக்கியமாக இந்த சாம்பார் செய்வதற்கு 10 நிமிடம் போதும். மேலும் இந்த சாம்பார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு இந்த பாசிப்பருப்பு சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு சாம்பார் அல்லது இட்லி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1 கப்
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 20-25
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் 1 கப் பாசிப்பருப்பை எடுத்து, நீரில் 2 முறை
கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய
தக்காளியை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள், சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, 3 கப் தண்ணீரை ஊற்றி கலந்து, குக்கரை அடுப்பில் வைத்து,
குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, மத்து கொண்டு நன்கு கடைந்து
கொள்ள வேண்டும். மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை சேர்த்துக்
கொள்ளுங்கள்.
* பின்னர் தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் அந்த சாம்பார் குக்கரை அப்படியே அடுப்பில் வைத்து, ஒரு கொதி
விட்டு இறக்கி, நெய் மற்றும் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான
பாசிப்பருப்பு சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications