Latest Updates
-
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா?
பாசிப்பருப்பு வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு பொருத்தமா இருக்கும்..
Idli Sambar Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று சாம்பார் செய்யுங்கள். அதுவும் பாசிப்பருப்பைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள். இந்த பாசிப்பருப்பு சாம்பார் இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் பொருத்தமாக இருக்கும். முக்கியமாக இந்த சாம்பார் செய்வதற்கு 10 நிமிடம் போதும். மேலும் இந்த சாம்பார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு இந்த பாசிப்பருப்பு சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு சாம்பார் அல்லது இட்லி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1 கப்
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 20-25
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் 1 கப் பாசிப்பருப்பை எடுத்து, நீரில் 2 முறை
கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய
தக்காளியை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள், சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, 3 கப் தண்ணீரை ஊற்றி கலந்து, குக்கரை அடுப்பில் வைத்து,
குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, மத்து கொண்டு நன்கு கடைந்து
கொள்ள வேண்டும். மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை சேர்த்துக்
கொள்ளுங்கள்.
* பின்னர் தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் அந்த சாம்பார் குக்கரை அப்படியே அடுப்பில் வைத்து, ஒரு கொதி
விட்டு இறக்கி, நெய் மற்றும் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான
பாசிப்பருப்பு சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications











