Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா டக்குனு இத செய்யுங்க... வீட்ல எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க...!
Paruppu Sadam Recipe in Tamil: குழந்தைகளுக்கு பெரும்பாலும் தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்தையே விருப்பி சாப்பிடுவார்கள். அவர்கள் விரும்புவதால் நாமும் அதையே அவர்களுக்கு கொடுப்போம். ஆனால் உணவில் பருப்பு சேர்ப்பது ஓரளவிற்கு உடலுக்கு தேவையான புரதத்தை கொடுக்கும்.
குழந்தைகள் சாம்பார் போன்ற பருப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்கிறார்கள். அவர்களை விரும்பி சாப்பிட வைக்கவும், நமக்கு செய்ய எளிதாக இருக்கும் ஒரு உணவை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். சரி வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- அரிசி - 1 கப்
- துவரம் பருப்பு - ¼ கப்
- தக்காளி - 3
- பெரிய வெங்காயம் - 2
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- வர மிளகாய் - 3
- கருவேப்பிலை - 1 கொத்து
- பூண்டு - 10 பல்
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்
- உடைத்த உளுந்து - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- நெய் - 3 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- அரிசி மற்றும் துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு முறை தண்ணீர் சேர்த்து அலசி கொள்ளவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கவும்.
- தக்காளியை நன்றாக கழுவி காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய விடவும்.
- அதில் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.
- அதில் கடலைப்பருப்பு மற்றும் உடைத்த உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- பின் வரமிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.
- அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அரைப்பதம் வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதோடு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக குழைய வதக்கி அதனுடன் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
- பின் அதனுடன் நன்கு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- கொதிக்க ஆரம்பித்ததும் கழுவி ஊற வைத்த அரிசி மற்றும் துவரம் பருப்பை சேர்த்து கிளறி குக்கரை மூடவும்.
- 4 அல்லது 5 விசில் விட்டு நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து சிறிதளவு நெய் சேர்த்து கிளறினால் சுவையான அரிசி பருப்பு சாதம் ரெடி!



Click it and Unblock the Notifications











