Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா டக்குனு இத செய்யுங்க... வீட்ல எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க...!
Paruppu Sadam Recipe in Tamil: குழந்தைகளுக்கு பெரும்பாலும் தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்தையே விருப்பி சாப்பிடுவார்கள். அவர்கள் விரும்புவதால் நாமும் அதையே அவர்களுக்கு கொடுப்போம். ஆனால் உணவில் பருப்பு சேர்ப்பது ஓரளவிற்கு உடலுக்கு தேவையான புரதத்தை கொடுக்கும்.
குழந்தைகள் சாம்பார் போன்ற பருப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்கிறார்கள். அவர்களை விரும்பி சாப்பிட வைக்கவும், நமக்கு செய்ய எளிதாக இருக்கும் ஒரு உணவை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். சரி வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- அரிசி - 1 கப்
- துவரம் பருப்பு - ¼ கப்
- தக்காளி - 3
- பெரிய வெங்காயம் - 2
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- வர மிளகாய் - 3
- கருவேப்பிலை - 1 கொத்து
- பூண்டு - 10 பல்
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்
- உடைத்த உளுந்து - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- நெய் - 3 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- அரிசி மற்றும் துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு முறை தண்ணீர் சேர்த்து அலசி கொள்ளவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கவும்.
- தக்காளியை நன்றாக கழுவி காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய விடவும்.
- அதில் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.
- அதில் கடலைப்பருப்பு மற்றும் உடைத்த உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- பின் வரமிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.
- அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அரைப்பதம் வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதோடு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக குழைய வதக்கி அதனுடன் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
- பின் அதனுடன் நன்கு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- கொதிக்க ஆரம்பித்ததும் கழுவி ஊற வைத்த அரிசி மற்றும் துவரம் பருப்பை சேர்த்து கிளறி குக்கரை மூடவும்.
- 4 அல்லது 5 விசில் விட்டு நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து சிறிதளவு நெய் சேர்த்து கிளறினால் சுவையான அரிசி பருப்பு சாதம் ரெடி!



Click it and Unblock the Notifications











