Just In
- 2 hrs ago
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
- 3 hrs ago
தைப்பூசம் பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
- 4 hrs ago
உங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...!
Don't Miss
- Movies
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- News
பிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Automobiles
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுவையான... பன்னீர் பக்கோடா
குளிர்காலத்தில் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சூடாகவோ, காரசாரமாகவோ அல்லது மொறுமொறுப்பாகவோ ஏதேனும் சாப்பிடத் தோன்றும். அப்போது நம்மில் பலர் செய்து சாப்பிடுவது பக்கோடாவாகத் தான் இருக்கும். பக்கோடாவில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் வெங்காய பக்கோடாவைத் தான் அதிகம் செய்து சுவைத்திருப்போம். ஆனால் பன்னீரைக் கொண்டும் அற்புதமான சுவையில் பக்கோடா செய்யலாம் என்பது தெரியுமா?
கீழே அந்த பன்னீர் பக்கோடாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம்
* தக்காளி கெட்சப் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மாவிற்கு...
* கடலை மாவு - ஒரு கப்
* அரிசி மாவு அல்லது சோள மாவு - கால் கப்
* ஓமம் - கால் டீஸ்பூன்
* சாட் மசாலா பவுடர் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
* அதே சமயம் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு அல்லது சோள மாவு, ஓமம், சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை எடுத்து, அதில் நீரை ஊற்றி பக்கோடா மாவு பதத்திற்கு ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் பன்னீரை எடுத்து, மெல்லிய செவ்வக துண்டுகளாக வெட்டவும். பின்பு ஒரு பன்னீர் துண்டை எடுத்து, அதன் மேல் கெட்சப்பை பரப்பி, பின் அதன் மேல் மற்றொரு பன்னீரை வைக்க வேண்டும்.
* இப்போது அதை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் பக்கோடா தயார். இதேப் போல் அனைத்து பன்னீரையும் போட்டு எடுங்கள்.