Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
பள்ளிப்பாளையம் காளான் வறுவல் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... சிக்கனை விட டேஸ்ட் சூப்பரா இருக்கும்...!
Pallipalayam Mushroom Fry Recipe in Tamil: சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகள் பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்தவையாக இருக்க காரணம் அதன் சுவைதான். ஏனெனில் அசைவ உணவுகள் சமைப்பது போலவே சமைத்தாலும் சைவ உணவுகளால் அசைவத்தின் சுவையை ஈடுசெய்ய முடியாது. அதனால்தான் அசைவ உணவுகளுக்கான தேவையும், அவற்றை சமைக்கும் விதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விதிவிலக்காக சில பொருட்கள் அசைவ உணவின் சுவையை கிட்டதட்ட 90% ஈடுசெய்யும். அதில் முக்கியமான ஒன்றுதான் காளான். காளானை சிக்கனை சமைக்கும் அனைத்து வழிகளிலும் சமைக்கலாம். அப்படி காளானை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான சைடிஷ்தான் கொங்கு ஸ்பெஷல் பள்ளிப்பாளையம் காளான்.

பள்ளிப்பாளையம் சிக்கன் தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். பள்ளிப்பாளையம் காளானும் கிட்டத்தட்ட அதே போல அட்டகாசமான சுவையில் இருக்கும். காளான் சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட, அதனை இந்த முறையில் செய்யும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் சூப்பரான பள்ளிப்பாளையம் காளானை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- காளான் - 200 கிராம்
- தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் - 5
- கறிவேப்பிலை - சிறிது
- பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- நறுக்கிய தக்காளி - 1
- பொடியாக நறுக்கிய தேங்காய் - 1/4 கப்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும், அதன்பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
- பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
- கலவை நன்கு கொதித்ததும் அதில் நறுக்கிய காளான் சேர்த்து வேக வைக்கவும். காளான் வெந்ததும் தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
- காளான் நன்கு வெந்ததும், இறக்கி மேலே சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது மிளகுத் தூள் தூவி இறக்கினால், அட்டகாசமான பள்ளிப்பாளையம் காளான் வறுவல் ரெடி!



Click it and Unblock the Notifications











