Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
நீங்கள் பிரியாணிப் பிரியரா?
அசைவப் பிரியர்களில், பிரியாணியை விரும்பாதாவர்கள் யாரும் கிடையாது. இதோ அருமையான, சுவையான பிரியாணி சமைக்கும் முறை.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
ஆட்டு இறைச்சி (அல்லது கோழி) - 1 1/2 கிலோ
வெங்காயம் - 3/4 கிலோ
தக்காளி - 3/4 கிலோ
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
எலுமிச்சை - 2
தயிர் - 200 கிராம்
நெய் - 200 கிராம்
இஞ்சி விழுது - 150 கிராம்
பூண்டு விழுது - 150 கிராம்
புதினா & கொத்தமல்லி இலை - தோவைக்கேற்ப
கேசரி பவுடர் - சிறிதளவு
ஏலக்காய் - 4
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
1. குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றவும்.
2. எண்ணெய் சூடானவுடன் ஏலக்காயைப் போடவும்.
3. பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லி இலையைச் சேர்க்கவும்.
5. லேசாக வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
6. இதற்கிடையே அரிசியை தண்ணீரி்ல் குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி உடையாமல் இருக்க அதில பாதி எலுமிச்சம் பழச் சாற்றை பிழியவும்.
7. ஆட்டு இறைச்சியை (அல்லது கோழி) சுத்தம் செய்து அதில் உப்பு, மிளகாய் தூள், கேசரி பவுடர் கலந்து அதை வதக்கி வைத்திருப்பவையுடன் கலக்கவும்.
8. பிறகு இறைச்சி வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 4 விசிலுக்கு வைக்கவும்.
9. ஆவியை நீக்கிவிட்டு தயிரைச் சேர்த்து மீண்டும் 4 விசிலுக்கு வைக்கவும்.
10. மீண்டும் ஆவியை நீக்கிவிட்டு அதில் அரிசியைப் போடவும்.
11. ஏற்கனவே குக்கரில் தண்ணீர் இருந்தால் அதற்கேற்ப அரிசிக்கு தண்ணீர் ஊற்றி 2 விசிலுக்கு வைக்கவும்.
12. 2 விசில் வந்ததும் ஆவியை நீக்கிவிட்டு குக்கரை சிறிது நேரம் மூடி வைக்கவும்.
இதோ சூடான, சுவையான பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications
