Just In
- 3 hrs ago
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- 10 hrs ago
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- 10 hrs ago
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 11 hrs ago
உங்க வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வீட்டுல வையுங்க...
Don't Miss
- News
இந்திய சொட்டு மருந்தை பயன்படுத்தியவர் அமெரிக்காவில் உயிரிழப்பு! சென்னை நிறுவனத்திற்கு பெரிய சிக்கல்
- Sports
"பயந்ததை போலவே நடக்குதே".. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. பிசிசிஐ எடுக்த அட்டகாச முடிவு!
- Movies
AK 62வில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட வேதனை.. அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன்!
- Technology
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்
9 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி பூஜையின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பிரசாதம் செய்து படைப்பீர்களா? இன்று என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் ஜவ்வரிசி சுண்டல் செய்யுங்கள். ஜவ்வரிசி சுண்டல் செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இதற்கு ஜவ்வரிசியும், பாசிப்பருப்பும் இருந்தால் போதும். ஜவ்வரிசி சுண்டல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக இதை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடலாம்.
உங்களுக்கு ஜவ்வரிசி சுண்டல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி சுண்டல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஜவ்வரிசி - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, பருப்பு மூழ்கும் வரை நீரை ஊற்றி, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது பருப்பானது பார்க்கும் போது முழுசாகவும், அழுத்தும் போது மென்மையாகவும் இருக்கும் அளவு வேக வைத்து இறக்க வேண்டும். பொதுவாக பாசிப்பருப்பு வேக 3-5 நிமிடம் எடுக்கும்.
* பின் ஜவ்வரிசியை நீரில் அலசி, குறைந்தது 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக ஜவ்வரிசியில் அளவுக்கு அதிகமாக நீர் ஊற்றி விட வேண்டாம். ஜவ்வரிசி மூழ்கும் வரையில் மட்டும் நீர் ஊற்றினால் போதும். இல்லாவிட்டால், ஜவ்வரிசி அளவுக்கு அதிகமான நீரை உறிஞ்சி குலைந்துவிடும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ஜவ்வரிசி சுண்டல் தயார்.
Image Courtesy: sharmispassions