Just In
- 3 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 4 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 7 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 9 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மணமணக்கும்... காளான் பிரியாணி
காளான் அசைவ உணவின் சுவையைத் தரக்கூடியது. அத்தகைய காளானைக் கொண்டு எப்போதும் கிரேவி செய்வதற்கு பதிலாக, அதைக் கொண்டு பிரியாணி செய்து சாப்பிடுங்கள். காளான் பிரியாணி செய்வது மிகவும் ஈஸி.
நீங்கள் பிரியாணி பிரியரா? புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட முடியாதவர்களுக்கு காளான் ஒரு சிறந்த மாற்று உணவுப் பொருள். ஏனெனில் காளான் அசைவ உணவின் சுவையைத் தரக்கூடியது. அத்தகைய காளானைக் கொண்டு எப்போதும் கிரேவி செய்வதற்கு பதிலாக, அதைக் கொண்டு பிரியாணி செய்து சாப்பிடுங்கள். காளான் பிரியாணி செய்வது மிகவும் ஈஸி. அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு காளான் பிரியாணியை செய்து சாப்பிடுங்கள். முக்கியமாக அதை செய்து சுவைத்த பின், எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1 கப்
* காளான் - 200 கிராம்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தேங்காய் பால் - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
ஊற வைப்பதற்கு...
* தயிர் - 1/2 கப்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - 1/4 கப்
* கொத்தமல்லி - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* நெய் - 3 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 1
* அன்னாசிப்பூ - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாசுமதி அரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய பாசுமதி அரிசியில் 1 1/2 கப் நீரை ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 2 கப் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் காளான், தயிர், நறுக்கிய தக்காளி, பாதி வதக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, அத்துடன் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். காளான் நன்கு நீர் விட்டு வெந்ததும், அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை நீருடன் சேர்த்து கிளற வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கப் கெட்டியான தேங்காய் பால் ஊற்றி கிளறி, கொதிக்க விட வேண்டும்.
* உலை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்துவிட்டு மீண்டும் 15 நிமிடம் அப்படியே தனியாக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் மீதமுள்ள வதக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, மேலே ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி மென்மையாக ஒருமுறை கிளறினால், காளான் பிரியாணி தயார்.
Image Courtesy: sharmispassions