Latest Updates
-
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க..
முருங்கைக்கீரை கூட்டு
பொதுவாக முருங்கைக்கீரை கொண்டு பொரியல் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இந்த கீரையைக் கொண்டு கூட்டு செய்யலாம் தெரியுமா?
கீரைகள் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது இன்னும் நல்லது. அதோடு இந்த கீரை எளிதில் கிடைக்கக்கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகை உள்ளவர்கள் முருங்கைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவது, இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும். பொதுவாக முருங்கைக்கீரை கொண்டு பொரியல் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இந்த கீரையைக் கொண்டு கூட்டு செய்யலாம் தெரியுமா?

கீழே முருங்கைக்கீரை கூட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்கீரை - 2 கப்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீபூன்
* சாம்பார் பவுடர் - 1/2 டீபூன்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* பாசிப் பருப்பு - 1/8 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீபூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீபூன்
* சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது)
* எண்ணெய் - 2 டீபூன்
* பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
அரைப்பதற்கு...
* தேங்காய் - 2 1/2 டேபிள் பூன்
* சீரகம் - 1/2 டீபூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* பின்னர் குக்கரில் வறுத்த பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பைப் போட்டு, 1 கப் நீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்கவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் சிறிது நீர் சேர்த்து, மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு முருங்கைக்கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் தக்காளியைப் போட்டு மென்மையாக வதக்க வேண்டும்.
* பின் அதில் முருங்கைக்கீரை, மஞ்சள் தூள், சாம்பார் பவுடர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி மூடி வைத்து, கீரை நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும்.
* கீரை நன்கு வெந்துவிட்டால், அதன் நிறம் சற்று மாறியிருக்கும். இப்போது வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்ர்த்து, சில நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்க விடவும்.
* மறுபுறம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* இறுதியில் தாளித்த கலவையை கீரையுடன் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால், முருங்கைக் கீரை கூட்டு தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











