Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Mother's Day 2023: அன்னையர் தின ஸ்பெஷல் - கேரட் தேங்காய் பால் அல்வா
Mother's Day 2023: ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே 14 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை சந்தோஷப்படுத்த நினைக்கிறீர்களா?
ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லையா? நீங்கள் இதுவரை வீட்டில் சமையலறை பக்கமே சென்றதில்லையா? அப்படியானால் அவர்களுக்கு ஒரு சுவையான அல்வாவை உங்கள் கையால் செய்து கொடுங்கள்.

அதுவும் கேரட் தேங்காய் பால் அல்வாவை செய்து கொடுங்கள். இந்த அல்வா செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது வேகமாக செய்யக்கூடியது. உங்களுக்கு கேரட் தேங்காய் பால் அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே கேரட் தேங்காய் பால் அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 2 கப் (துருவியது)
* தேங்காய் பால் - 2 கப்
* சர்க்கரை - 1 கப்
* நெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பவுடர் - 1 சிட்டிகை
* பாதாம் - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கேரட்டை கழுவி , தோல் நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* நெய் சூடானதும், அதில் பொடியாக நறுக்கிய பாதமை சேர்த்து வறுத்து
தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் கேரட்டை சேர்த்து பச்சை வாசனை போக குறைந்தது
5-7 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தேங்காய் பாலை சேர்த்து, சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து
நன்கு கிளற வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, கேரட்டை நன்கு வேக வைக்க வேண்டும். தேங்காய்
பால் முழுவதும் வற்றுவதற்கு 10 நிமிடம் ஆகும். எனவே 10-15 நிமிடம்
நன்கு கேரட்டை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் மீதமுள்ள நெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி,
மிதமான தீயில் வைத்து தொடர்ந்து கிளற வேண்டும்.
* அல்வா பதத்திற்கு திரண்டு வரும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, அதில்
வறுத்து வைத்துள்ள பாதாமை சேர்த்து கிளறினால், சுவையான கேரட் தேங்காய்
பால் அல்வா தயார்.
Image Courtesy: cooking4allseasons



Click it and Unblock the Notifications