மஞ்சள் கிழங்கை தூக்கியெறியாம இந்த மாதிரி சுவையான சட்னியா அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...!

Posted By:

Manjal Kilangu Chutney Recipe in Tamil: தமிழர் பண்டிகையான பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவிட்டது. அனைத்து வீடுகளிலும் பொங்கல் வைப்பதற்கு நிச்சயம் மஞ்சள் கிழங்கு வாங்கியிருப்போம். ஆனால் பொங்கல் முடிந்த பிறகு அந்த மஞ்சள் கிழங்கை நாம் தூக்கித்தான் எறிவோம். நகரங்களில் மட்டுமல்ல கிராமத்தில் கூட இந்த மஞ்சள் கிழங்கை தூக்கித்தான் எறிவார்கள்.

இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். இந்த மஞ்சள் கிழங்கை வைத்து சூப்பரான அதேசமயம் ஆரோக்கியமான சட்னியை அரைக்கலாம். இந்த சட்னி இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த சட்னி சுவையாக இருப்பது மட்டுமின்றி வயிற்றுப்புண், செரிமான பிரச்சினைகள் மற்றும் அஜீரணக் கோளாறு போன்ற பல பிரச்சினைகளை குணப்படுத்தும்.

Manjal Kilangu Chutney Recipe How to Make Manjal Kilangu Chutney

உங்களுக்கு மஞ்சள் கிழங்கை வைத்து வித்தியாசமான சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஞ்சள் கிழங்கு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- துருசியா மஞ்சள் கிழங்கு - 1/4 கப்
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- பூண்டு - 5 பல்
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - சிறிய துண்டு
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு

தாளிக்க:

- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

- முதலில் மஞ்சள் கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி கேரட் போல துருவி வைத்துக் கொள்ளவும். அதேபோல தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.

- ஒரு மிக்சி ஜாரில் துருவிய மஞ்சள், துருவிய தேங்காய், பூண்டு பல், பச்சை மிளகாய், சீரகம், கடலைப் பருப்பு, புளி மற்றும் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

- சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான சட்னியாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.

- சட்னியை தாளிக்க ஒரு சிறிய கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

- எண்ணெய் சூடானதும் அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

- உளுந்தம்பருப்பு நிறம் மாறியதும் இதை சட்னி மீது ஊற்றி நன்கு கிளறவும்.

- இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பரான சைடிஷாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, January 18, 2026, 20:55 [IST]
Desktop Bottom Promotion