Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
மணமணக்கும்.. ருசியான.. செட்டிநாடு ஆட்டு குடல் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
Chettinad Kudal Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஆட்டுக்குடல் ரொம்ப பிடிக்குமா? ஆனால் உங்களுக்கு ஆட்டுக்குடலை எப்படி சமைப்பது என்று தெரியாதா? ஆட்டுக்குடல் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஆட்டுக்குடலைக் கொண்டு கிரேவி, குழம்பு, வறுவல் என்று செய்து சாப்பிடலாம். நீங்கள் சாதத்துடன் அல்லது இட்லி, தோசையுடன் சாப்பிட நினைத்தால், ஆட்டுக்குடல் கிரேவி அல்லது குழம்பை செய்யலாம்.
அதுவும் உங்களுக்கு செட்டிநாடு சமையல் பிடிக்குமானால், செட்டிநாடு ஸ்டைலில் ஆட்டுக்குடல் கிரேவியை ட்ரை செய்யுங்கள். இந்த குடல் கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாகவும், வீடே மணக்கும் அளவில் சுவையுடனும் இருக்கும். மேலும் இது பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஆட்டுக்குடல் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஆட்டுக்குடல் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஆட்டுக்குடல் - 1
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 3
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 4
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* செட்டிநாடு சிக்கன் மட்டன் மசாலா - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஆட்டு குடலை சுடுநீரில் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து,
3-4 முறை அலசிக் கொள்ள வேண்டும். அப்படி அலசும் போது, அதன் மேல் உள்ள
தோலை உரித்து நீக்கிவிட வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து,
தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் செட்டிநாடு சிக்கன் மட்டன் மசாலாவை சேர்த்து 2 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* பிறகு சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, கழுவி
வைத்துள்ள ஆட்டு குடலை சேர்த்து நன்கு ஒன்று சேரும் வரை 5 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி
8-9 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு
5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக சிறிது கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான
செட்டிநாடு ஆட்டு குடல் கிரேவி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications