Latest Updates
-
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம் -
செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன? -
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
மணமணக்கும்.. ருசியான.. செட்டிநாடு ஆட்டு குடல் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
Chettinad Kudal Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஆட்டுக்குடல் ரொம்ப பிடிக்குமா? ஆனால் உங்களுக்கு ஆட்டுக்குடலை எப்படி சமைப்பது என்று தெரியாதா? ஆட்டுக்குடல் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஆட்டுக்குடலைக் கொண்டு கிரேவி, குழம்பு, வறுவல் என்று செய்து சாப்பிடலாம். நீங்கள் சாதத்துடன் அல்லது இட்லி, தோசையுடன் சாப்பிட நினைத்தால், ஆட்டுக்குடல் கிரேவி அல்லது குழம்பை செய்யலாம்.
அதுவும் உங்களுக்கு செட்டிநாடு சமையல் பிடிக்குமானால், செட்டிநாடு ஸ்டைலில் ஆட்டுக்குடல் கிரேவியை ட்ரை செய்யுங்கள். இந்த குடல் கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாகவும், வீடே மணக்கும் அளவில் சுவையுடனும் இருக்கும். மேலும் இது பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஆட்டுக்குடல் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஆட்டுக்குடல் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஆட்டுக்குடல் - 1
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 3
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 4
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* செட்டிநாடு சிக்கன் மட்டன் மசாலா - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஆட்டு குடலை சுடுநீரில் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து,
3-4 முறை அலசிக் கொள்ள வேண்டும். அப்படி அலசும் போது, அதன் மேல் உள்ள
தோலை உரித்து நீக்கிவிட வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து,
தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் செட்டிநாடு சிக்கன் மட்டன் மசாலாவை சேர்த்து 2 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* பிறகு சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, கழுவி
வைத்துள்ள ஆட்டு குடலை சேர்த்து நன்கு ஒன்று சேரும் வரை 5 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி
8-9 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு
5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக சிறிது கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான
செட்டிநாடு ஆட்டு குடல் கிரேவி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications