கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..

Posted By:

Krishna Jayanthi Aval Payasam Recipe in Tamil: கிருஷ்ண ஜெயந்தி நாளில் உங்கள் வீட்டில் பலவிதமான பலகாரங்களை செய்து கிருஷ்ணருக்கு படைத்து வழிபடும் வழக்கம் உள்ளதா? முக்கியமாக கிருஷ்ணருக்கு பால் பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய பலகாரங்கள் ரொம்ப பிடிக்கும் என்பதால், பால் பொருட்களை கொண்டு நிறைய பலகாரங்களை செய்து பலர் படைத்து வழிபடுவார்கள்.

Krishna Jayanthi Special Recipes How To Make Aval Payasam Recipe in Tamil

பொதுவாக ஒரு விஷேச தினம் என்றால் நிச்சயம் வீட்டில் பாயாசம் செய்வோம். அப்படி கிருஷ்ண ஜெயந்திக்கும் பாயாசம் செய்வதாக இருந்தால் வழக்கமாக செய்யும் பாயாசத்தை செய்யாமல், அவல் கொண்டு பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் நன்கு சுவையாக இருப்பதோடு, க்ரீமியாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த அவல் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சிவப்பு கெட்டி அவல் - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - சிறிது
* காய்ச்சிய பால் - 4 கப் அல்லது 1 லிட்டர்
* ஏலக்காய் - 3
* பொடித்த வெல்லம் - 1 கப்
* முந்திரி - சிறிது
* உலர் திராட்சை - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், 1 கப் சிவப்பு கெட்டி அவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் 1/2 கப் பாசிப்பருப்பை கழுவி சேர்த்து, பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரில் வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து, அதில் சிறிது நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும். வி
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதை ஒரு வாணலியில் எடுத்து கொண்டு, அதில் வறுத்த அவலை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் 4 கப் காய்ச்சிய பாலை ஊற்றி, 3 ஏலக்காயை இடித்து சேர்த்து கிளறி, மூடி வைத்து 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அவல் வெந்ததும், அதை இறக்கி, அத்துடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறி, மீண்டும் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, கொதி வர ஆரம்பித்ததும், அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து இறக்கி, பாயாசத்துடன் சேர்த்து கிளறினால், சுவையான மற்றும் க்ரீமியான அவல் பாயாசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, September 3, 2026, 14:35 [IST]
Desktop Bottom Promotion