Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் கேரட் ஜவ்வரிசி பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாருங்க..
Krishna Jayanthi Special Carrot Javvarisi Payasam: நாளை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலவிதமான பலகாரங்களை வீட்டில் செய்து, கிருஷ்ணருக்கு படைத்து வழிபடுவது வழக்கம். கிருஷ்ணருக்கு பாயாசம், சீடை, லட்டு மற்றும் பால் பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய அனைத்து பலகாரங்களும் பிடிக்கும்.
இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு நீங்கள் ஒரு வித்தியாசமான பாயாசத்தை செய்து கிருஷ்ணருக்கு படைக்க விரும்பினால், கேரட் ஜவ்வரிசி பாயாசத்தை செய்யுங்கள். இந்த பாயாசம் நல்ல வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கேரட் ஜவ்வரிசி பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் ஜவ்வரிசி பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாவு ஜவ்வரிசி - 1 கப்
* நெய் - 2 டீஸ்பூன்
* முந்திரி - 20
* உலர் திராட்சை - 20
* கேரட் - 1 (துருவியது)
* காய்ச்சாத பால் - 3/4 லிட்டர்
* சர்க்கரை - 2 கப்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மாவு ஜவ்வரிசியை எடுத்து, நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் கேரட்டை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே நெய்யில் துருவிய கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பின் அதில் காய்ச்சாத 3/4 லிட்டர் பாலை ஊற்றி கிளறி நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை
சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதித்த பின், அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி,
ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான
கேரட் ஜவ்வரிசி பாயாசம் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications









