Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் கேரட் ஜவ்வரிசி பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாருங்க..
Krishna Jayanthi Special Carrot Javvarisi Payasam: நாளை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலவிதமான பலகாரங்களை வீட்டில் செய்து, கிருஷ்ணருக்கு படைத்து வழிபடுவது வழக்கம். கிருஷ்ணருக்கு பாயாசம், சீடை, லட்டு மற்றும் பால் பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய அனைத்து பலகாரங்களும் பிடிக்கும்.
இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு நீங்கள் ஒரு வித்தியாசமான பாயாசத்தை செய்து கிருஷ்ணருக்கு படைக்க விரும்பினால், கேரட் ஜவ்வரிசி பாயாசத்தை செய்யுங்கள். இந்த பாயாசம் நல்ல வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கேரட் ஜவ்வரிசி பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் ஜவ்வரிசி பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாவு ஜவ்வரிசி - 1 கப்
* நெய் - 2 டீஸ்பூன்
* முந்திரி - 20
* உலர் திராட்சை - 20
* கேரட் - 1 (துருவியது)
* காய்ச்சாத பால் - 3/4 லிட்டர்
* சர்க்கரை - 2 கப்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மாவு ஜவ்வரிசியை எடுத்து, நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் கேரட்டை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே நெய்யில் துருவிய கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பின் அதில் காய்ச்சாத 3/4 லிட்டர் பாலை ஊற்றி கிளறி நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை
சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதித்த பின், அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி,
ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான
கேரட் ஜவ்வரிசி பாயாசம் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications








