Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
ஒருடைம் கடலை பருப்பும், வேர்க்கடலையும் வெச்சு இந்த சட்னியை ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்..
Kolar Chutney Recipe In Tamil: காலையில் இட்லி தோசைக்கு எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் அதே சமயம் செய்வதற்கு சுலபமாக இருக்கக்கூடிய ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலைக் கொண்டு செய்யக்கூடிய கோலார் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி கர்நாடகாவின் கோலார் பகுதியில் மிகவும் பிரபலமான சட்னி. இந்த சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு கோலார் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோலார் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 4
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்க
வேண்டும்.
* பின் அதில் வேர்க்கடலை சேர்த்து வறுத்து, மிக்சர் ஜாரில் வறுத்த
பருப்புக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் பூண்டு, நறுக்கிய தக்காளி, சீரகம்,
கறிவேப்பிலை, வரமிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து, தக்காளி
மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை ஜாரில் உள்ள பருப்புடன் சேர்த்து, சிறிது
உப்பு தூவி, நீரை ஊற்றி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த சட்னியை ஊற்றி, சிறிது நீரை ஊற்றி கிளறி, அடுப்பை
அணைத்தால், சுவையான கோலார் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











