Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
வீட்டுல கறிவேப்பிலை அதிகமா இருக்கா? அப்ப ஒருமுறை இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..
Karuveppilai Chutney Recipe In Tamil: இன்று காலையில் இட்லி, தோசை சுடுற ஐடியா இருக்கா? அதுக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகமாக உள்ளதா? உங்கள் வீட்டில் யாரும் சமையலில் சேர்க்கும் கறிப்பிலையை சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு கறிவேப்பிலையைக் கொண்டு ஒரு அருமையான சுவையில் சட்னியை செய்து கொடுங்கள்.
இந்த கறிவேப்பிலை சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் சாப்பிடக்கூடியவாறு சுவையாக இருக்கும். பொதுவாக கறிவேப்பிலை சட்னியில் லேசான கசப்பு தெரியும். ஆனால் இந்த கறிவேப்பிலை சட்னியில் அந்த கசப்பு தெரியாது.

உங்களுக்கு கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* பச்சை மிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - 2 கைப்பிடி
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் கறிவேப்பிலையை நீரல் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை
வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலையை சேர்த்து, சுருங்கும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கறிவேப்பிலை சட்னி
தயார்.
Image Courtesy: Indian Curry



Click it and Unblock the Notifications











