Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
1/4 கப் கடலைப்பருப்பு இருந்தா இந்த ஈஸியான சட்னியை செய்யுங்க... இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்...!
Kadalai Paruppu Chutney Recipe in Tamil: தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவு எப்போதும் இட்லி அல்லது தோசையாகத்தான் இருக்கும். இட்லி, தோசைக்கு எளிதில் செய்யக்கூடிய சரியான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னிதான். இட்லி, தோசையின் சுவையை அதிகமாக்குவதே அதனுடன் பரிமாறப்படும் சட்னிதான். எனவே அந்த சட்னி சுவையானதாக இருக்க வேண்டியது அவசியம்.
பொதுவாக இட்லி, தோசைக்கு அரைக்கப்படும் சட்னிகளில் வெங்காயம் மற்றும் பூண்டு பிரதான பொருட்களாக இருக்கும். ஆனால் இந்த இரண்டு பொருட்களும் இல்லாமலேயே இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னியை செய்யலாம். வெங்காயமும், பூண்டும் இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த கடலைப்பருப்பு சட்னியானது மிகவும் எளிதாக செய்யக்கூடிய சுவையான சட்னியாகும்.

உங்களுக்கு கடலைப்பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப்பருப்பு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1/4 கப் கடலைப்பருப்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 4 வர மிளகாய்
- 1/2 கப் தேங்காய் துருவல்
- சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுந்து
- சிறிதளவு கறிவேப்பிலை
- 1 வர மிளகாய்
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் ¼ கப் கடலைப் பருப்பை போட்டு வறுக்கவும்.
- பருப்பு பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
- பின்னர் 1 கொத்து கறிவேப்பிலை மற்றும் 4 வர மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- கறிவேப்பிலை மொறுமொறுப்பாக மாறும் வரை தொடர்ந்து வறுக்கவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஆற வைக்கவும்.
- நன்கு ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
- பின்னர் அதில் ½ கப் தேங்காய், சிறிதளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- இறுதியாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைக்கவும்.
- இந்த சட்னி கெட்டியாக இருந்தால்தான் சுவையாக இருக்கும், எனவே தண்ணீரை குறைவாக சேர்க்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு சிறிய கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்கவும், கடுகு பொரிந்ததும் அதில் அரை ஸ்பூன் உளுந்து, சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் ஒரு வர மிளகாய் சேர்த்து தாளித்து சட்னி மீது கொட்டவும்.
- அவ்வளவுதான் எளிதான மற்றும் சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி!
- இதை சூடான இட்லி, தோசையுடன் சாப்பிட்டு மகிழுங்கள்.



Click it and Unblock the Notifications