Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
1/4 கப் கடலைப்பருப்பு இருந்தா இந்த ஈஸியான சட்னியை செய்யுங்க... இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்...!
Kadalai Paruppu Chutney Recipe in Tamil: தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவு எப்போதும் இட்லி அல்லது தோசையாகத்தான் இருக்கும். இட்லி, தோசைக்கு எளிதில் செய்யக்கூடிய சரியான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னிதான். இட்லி, தோசையின் சுவையை அதிகமாக்குவதே அதனுடன் பரிமாறப்படும் சட்னிதான். எனவே அந்த சட்னி சுவையானதாக இருக்க வேண்டியது அவசியம்.
பொதுவாக இட்லி, தோசைக்கு அரைக்கப்படும் சட்னிகளில் வெங்காயம் மற்றும் பூண்டு பிரதான பொருட்களாக இருக்கும். ஆனால் இந்த இரண்டு பொருட்களும் இல்லாமலேயே இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னியை செய்யலாம். வெங்காயமும், பூண்டும் இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த கடலைப்பருப்பு சட்னியானது மிகவும் எளிதாக செய்யக்கூடிய சுவையான சட்னியாகும்.

உங்களுக்கு கடலைப்பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப்பருப்பு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1/4 கப் கடலைப்பருப்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 4 வர மிளகாய்
- 1/2 கப் தேங்காய் துருவல்
- சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுந்து
- சிறிதளவு கறிவேப்பிலை
- 1 வர மிளகாய்
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் ¼ கப் கடலைப் பருப்பை போட்டு வறுக்கவும்.
- பருப்பு பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
- பின்னர் 1 கொத்து கறிவேப்பிலை மற்றும் 4 வர மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- கறிவேப்பிலை மொறுமொறுப்பாக மாறும் வரை தொடர்ந்து வறுக்கவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஆற வைக்கவும்.
- நன்கு ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
- பின்னர் அதில் ½ கப் தேங்காய், சிறிதளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- இறுதியாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைக்கவும்.
- இந்த சட்னி கெட்டியாக இருந்தால்தான் சுவையாக இருக்கும், எனவே தண்ணீரை குறைவாக சேர்க்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு சிறிய கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்கவும், கடுகு பொரிந்ததும் அதில் அரை ஸ்பூன் உளுந்து, சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் ஒரு வர மிளகாய் சேர்த்து தாளித்து சட்னி மீது கொட்டவும்.
- அவ்வளவுதான் எளிதான மற்றும் சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி!
- இதை சூடான இட்லி, தோசையுடன் சாப்பிட்டு மகிழுங்கள்.



Click it and Unblock the Notifications