Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
உங்களுக்கு ரோட்டு கடை காளான் மசாலா ரொம்ப பிடிக்குமா? வீட்டிலேயே செய்யலாம் .. இதோ ரெசிபி..!
சாலை ஓரத்தில் தள்ளுவண்டி கடையில் விற்க்கப்படும் இந்த காளான் செம்ம சுவையான டேஸ்டாக இருக்கும்.. ஆனால் இந்த காளான் மசாலாவை சாப்பிட்டால் வயிற்று வலி உள்ளிட்ட சிக்கல் ஏற்படலாம். அது அவ்வளவு ஆரோகியமாக இருக்குமா? என்றால் சந்தேகம்தான்.. இதனால் இந்த காளான் மசாலாவை சுத்தமாவும் ஆரோக்கியமாக்வும் நம் வீட்டில் செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுத்தால் செம்மையா இருக்கும்.. இதை வீட்டிலேயே ரொம்ப சுலபமாக செய்ய இதோ ரெசிபி....
இந்த ரெசிபியில் காளான் மற்றும் முட்டை கோஸ் சேர்க்கப்படுகிறது.. இந்த முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது. அதுபோலவே காளான் எனப்படும் மஷ்ரூம் , புரதங்கள், லிப்பிடுகள் மற்றும் பினாலிக் கலவைகள் போன்ற உயிர்வேதியியல் கலவைகள் உள்ளன, அவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.

தேவையான பொருட்கள்
1. காளான் 250 கிராம்
2. 2 பெரிய வெங்காயம்
3. 2கப் பொடியாக நறுக்கிய கோஸ்
4. கான்பிளவர் மாவு கால் கப்
5. சோயா சாஸ் 3 ஸ்பூன்
6. தக்காளி சாஸ்
7. ரெட் சில்லி சாஸ்
8. எண்ணெய்
9. உப்பு
10. மிளகு தூள்
11. இஞ்சி - பூண்டு விழுது
12. கரம் மாசாலா
13. மிளகாய் தூள்
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் கோஸ் மற்றும்காளானை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கருவெப்பிலையை நறுக்கி 2 கொத்து சேர்க்கவும். 3 ஸ்பூன் கான்பிளவர் மாவையும் இதில் கலந்து விட வேண்டும்.. அத்துடன் அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
2. அதனைத் தொடர்ந்து 1 ½ ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து அந்த கலவையை நன்றாக பிசையவும். இதை தொடர்ந்து இதில் தண்ணீர் தெளித்து பிசையவும். பின்னர் இதை எண்ணெய்யில் பொறித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்..
3. அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்தவுடன் அதில் இஞ்சி - பூண்டு விழுது 1 ஸ்பூன் சேர்க்க வேண்டும்... இதை நன்றாக வதக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து அதையும் நன்றாக வதக்க வேண்டும்..
4. வெங்காயம் பிரவுன் நிறமாக மாற வேண்டும். பின்ன்ர் அதில் கருவேப்பிலை, கரம் மசாலா சேர்த்து கிளறவும். அதன் பிறகு அதில் மிளகு பொடி சேர்க்கவும். தொடர்ந்து தண்ணீர் 250 எம்.எல் சேர்க்கவும். அதன் பிறகு இதில் 2 ஸ்பூன் தக்காளி சாஸ், சோயா சாஸ் 2 ஸ்பூன், ரெட் சில்லி சாஸ் 1 ஸ்பூன் கலந்து விட வேண்டும்..
5. பின்னர் அதில் தண்ணீர் நன்கு குறையத் தொடங்கும் போது வறுத்த கோஸ் மஷ்ரூமை எடுத்து அதில் சேர்க்கவும். தொடர்ந்து 15 நிமிடங்கள் இந்த அனைத்து கலவையும் வதக்க வேண்டும். இதற்கு மேலாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறிது கார்ன் சிப்ஸ் தூவி விட்டு பரிமாறலாம்.. அப்படியே ரோட்டுக் கடை ஸ்டைலில் செமையாக ருசியாக இருக்கும்.. குழந்தைகள் மீண்டும் மீண்டும் செய்துக் கொடுக்க சொல்லிக் கேட்பார்கள்..



Click it and Unblock the Notifications