Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வேர்க்கடலை லட்டு
இந்த வருட விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு லட்டு செய்து கொடுக்க விரும்பினால், வேர்க்கடலை லட்டு செய்து கொடுங்கள். இந்த லட்டு செய்வது மிகவும் சுலபம்.
விநாயகர் சதுர்த்தி வரவுள்ளது. விநாயகரின் பிறந்தநாளையொட்டி பலரும் வீடுகளில் விநாயகர் சிலையை வாங்கி வைத்து, அவருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து வழிபடுவார்கள். விநாயகருக்கு கொழுக்கட்டை, மோதகம், லட்டு போன்றவை மிகவும் பிடிக்கும். இந்த வருட விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு லட்டு செய்து கொடுக்க விரும்பினால், வேர்க்கடலை லட்டு செய்து கொடுங்கள். இந்த லட்டு செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை லட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1 கப்
* வெல்லம் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் வேர்க்கடலையை ஒரு வாணலியில் போட்டு நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வெல்லத்தைப் போட்டு மீண்டும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை லட்டு போன்று உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
