Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
தீபாவளி ஸ்பெஷல் வாணியம்பாடி மட்டன் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Diwali Special Vaniyambadi Mutton Biryani Recipe In Tamil: இதுவரை நீங்கள் எத்தனையோ பிரியாணியை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இந்த தீபாவளிக்கு ஸ்பெஷலான பிரியாணி செய்ய நினைத்தால், வாணியம்பாடி மட்டன் பிரியாணியை செய்யுங்கள். இந்த பிரியாணி செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, நல்ல மணத்துடன் ருசியாகவும் இருக்கும்.
இந்த பிரியாணியை தீபாவளி நாளில் செய்தால், வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் பாராட்டைப் பெறலாம். இந்த பிரியாணியின் ஸ்பெஷலே, அதில் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான். அது தான் தனித்துவமான மணத்திற்கும், சுவைக்கும் காரணம். அதுவே ரோஸ்வாட்டர்.

உங்களுக்கு வாணியம்பாடி மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாணியம்பாடி மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* மட்டன் - 1/2 கிலோ
* தண்ணீர் - 1 லிட்டர்
* உப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 150 மிலி
* நெய் - 1/4 கப்
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 7
* ஏலக்காய் - 7
* வெங்காயம் - 4 (நீளவாக்கில் நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 5 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 3 (அரைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1/2 கப்
* பிரியாணி மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1/2 கட்டு
* புதினா - 1/2 கட்டு
* பச்சை மிளகாய் - 8
* ரோஸ்வாட்டர் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
சாதம் வேக வைப்பதற்கு...
* தண்ணீர் -
* உப்பு - 3 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* ஊற வைத்த பாசுமதி அரிசி - 1/2 கிலோ
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் போட்டு 15-20 நிமிடம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் 1/2 கிலோ மட்டனை கழுவி சேர்த்து, அத்துடன் 1
லிட்டர் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 2 டீஸ்பூன் இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து,
2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு அடிகனமான பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளை மட்டும் எடுத்து
சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மட்டன் வேக வைத்த நீரை தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், அரைத்த தக்காளி மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தயிரை சேர்த்து கிளறி பிரியாணி மசாலாவை சேர்த்து நன்கு
பிரட்டி விட வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லி, புதினா மற்றும் முழு பச்சை மிளகாயை
சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கிளறி, மட்டன் வேக
வைத்த நீரை முழுவதுமாக ஊற்றி, மூடி வைத்து நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் பாசுமதி
அரிசியை வேக வைக்க தேவையான அளவு நீரை ஊற்றி, அத்துடன் 3 டீஸ்பூன்
உப்பு, 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி, ஊற வைத்த பாசுமதி அரிசியை
சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் அரிசியை பாதியாக வேக வைத்து இறக்கி, நீரை
முழுவதுமாக வடிகட்டிவிட வேண்டும்.
* பின்பு கொதித்துக் கொண்டிருக்கும் பிரியாணி நீருடன், வேக வைத்த
பாசுமதி அரிசியை சேர்த்து கிளறி, சமப்படுத்தி விட வேண்டும்.
* பின் அதன் மேல் பாதி எலுமிச்சையின் சாறு மற்றும் 1 டீஸ்பூன் நெய்
சேர்த்து, பாத்திரத்திற்கு அடியில் ஒரு தோசைக்கல்லை வைத்து,
பாத்திரத்தை மூடி, மேலே ஒரு கனமான கல் அல்லது நீர் நிரப்பிய
பாத்திரத்தை வைத்து, உயர் தீயில் 10 நிமிடம் வேக வைத்து, பின் குறைவான
தீயில் வைத்து 10 நிமிடம் தம் போட்டு இறக்க வேண்டும். பின்பு 20
நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், சுவையான வாணியம்பாடி மட்டன்
பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications





