சப்பாத்தி, பூரிக்கு பன்னீர் இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்..

Posted By:

Dhaba Style Paneer Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் விடுமுறை நாட்களில் காலை வேளையில் சப்பாத்தி அல்லது பூரி செய்வது வழக்கமாக இருந்தால், இந்த வார இறுதியில் வழக்கமாக செய்யும் சப்பாத்தி, பூரிக்கு ஒரு ஸ்பெஷலான சைடு ஷ் செய்ய நினைத்தால், பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு தாபா ஸ்டைலில் மசாலா செய்யுங்கள். இந்த தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தாபா ஸ்டைல் பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Dhaba Style Paneer Masala How To Make a Paneer Masala Recipe

தேவையான பொருட்கள்:

வதக்குவதற்கு...

* பன்னீர் - 200 கிராம்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 1/2 டீஸ்பூன்

கிரேவிக்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (அரைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்ச தூள் - 1 சிட்டிகை
* சீரகத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கரம் மசாலா - 1 சிட்டிகை
* கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் பன்னீரை சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த பன்னீருடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து ப்ரை செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தயிரை சேர்த்து கிளறி விட்டு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் ப்ரை செய்த பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கரம் மசாலா, கசூரி மெத்தியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion