சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்... க்ரீமி மலாய் பன்னீர்

உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அவர்களுக்கு இன்று ஒரு சர்பிரைஸ் செய்ய நினைத்தால், க்ரீமி மலாய் பன்னீரை செய்து கொடுங்கள்.

Posted By:

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அவர்களுக்கு இன்று ஒரு சர்பிரைஸ் செய்ய நினைத்தால், க்ரீமி மலாய் பன்னீரை செய்து கொடுங்கள். இந்த மலாய் பன்னீர் ரெஸ்டாரண்ட்டுகளில் சாப்பிட்ட ஒரு உணர்வைத் தரும். மேலும் இந்த மலாய் பன்னீர் செய்வது மிகவும் சுலபம். 20 நிமிடத்தில் செய்துவிடலாம். பேச்சுலர்களும் இந்த க்ரீமி மலாய் பன்னீரை செய்யலாம். அந்த அளவில் இதன் செய்முறை சுலபமாக இருக்கும்.

Creamy Malai Paneer Recipe In Tamil

உங்களுக்கு க்ரீமி மலாய் பன்னீர் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீமி மலாய் பன்னீர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 200 கிராம்

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

* பாதாம் - 3 டேபிள் ஸ்பூன்

* முந்திரி - 3 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் -1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

* சீரகத் தூள் - 2 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

* கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்

* சர்க்கரை - 1 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* க்ரீம் - 1/2 கப்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பின் அதில் பன்னீரைப் போட்டு பொன்னிறமாக ஃப்ரை செய்து, சுடுநீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* அதே சமயம் முந்திரி மற்றும் பாதாமை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதையும் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

* பிறகு அதில் பாதாம் முந்திரி பேஸ்ட் சேர்த்து கிளறி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

* பின் சிறிது நீரை ஊற்றி, பன்னீர் துண்டுகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி 20 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

* பின்பு அதில் கசூரி மெத்தி மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கி, க்ரீமை சேர்த்து கிளறினால், சுவையான க்ரீமி மலாய் பன்னீர் தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Monday, January 9, 2023, 18:32 [IST]
Desktop Bottom Promotion