Just In
- 13 min ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 5 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 7 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 8 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மொறுமொறுப்பான... தேங்காய் தட்டை
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு அட்டகாசமான மற்றும் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், தேங்காய் தட்டை செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு அட்டகாசமான மற்றும் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், தேங்காய் தட்டை செய்து கொடுங்கள். இது மாலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது சாப்பிட அட்டகாசமாக இருக்கும் ஒரு ருசியான ஸ்நாக்ஸ். இந்த தட்டை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வண்ணம் அற்புதமாக இருக்கும்.
கீழே தேங்காய் தட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 2 கப்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* வரமிளகாய் - 2
* மல்லி விதைகள் - 2 டீபூன்
* ஓமம் - 1/4 டீபூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மல்லி விதைகள், ஓமம், வரமிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
* பின்பு ஒரு பெரிய பௌலில் அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரைத்த தேங்காய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை ஒரு 10 நிமிடம் ஊற வைக்கவும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.
* பின் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, உள்ளங்கையில் எண்ணெய் தடவி, அந்த உருண்டையை தட்டையாக தட்டி, எண்ணெய் போட்டு பொன்னிறிமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், தேங்காய் தட்டை தயார்.
Image Courtesy: archanaskitchen