Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒரே மாதிரி தேங்காய் சட்னி அரைக்காம இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
Coconut Milk Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசை தான் டிபனாக இருக்குமா? அவற்றிற்கு எப்போதும் உங்கள் வீட்டில் அடிக்கடி தேங்காய் சட்னி செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் தேங்காய் சட்னியை செய்வீர்களா? அப்படியானால் இந்த சட்னியை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். இது நீங்கள் இதுவரை சாப்பிடாத அளவிற்கு வித்தியாசமான சுவையில் இருக்கும்.
இந்த சட்னியின் தனித்துவமான சுவைக்குக் காரணம் அதில் சேர்க்கப்படும் முக்கியமான பொருள்தான். அது வேறு ஒன்றுமில்லை தேங்காய்ப்பால்தான், அதுமட்டுமின்றி இதில் சேர்க்கப்படும் சீரகத்தூள், கொத்தமல்லி போன்றவை இதன் சுவையை மேலும் அதிகரிக்கும். இந்த தேங்காய்ப்பால் சட்னி சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

முக்கியமாக இப்படி தேங்காய்ப்பால் சட்னி செய்யும் போது, வீட்டில் உள்ளவர்கள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அதுவும் இந்த சட்னியை தொட்டு சாப்பிடாமல், ஊற்றி ஊற வைத்து பிசைந்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை சூப்பராக இருக்கும்.
உங்களுக்கு இந்த தேங்காய்ப்பால் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய்ப்பால் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் தேங்காய்ப்பால்
- தேவையான அளவு உப்பு
- 1/4 கப் பொட்டுக்கடலை
- 1 துண்டு இஞ்சி
- 1 கப் கொத்தமல்லி இலைகள்
- 4 பல் பூண்டு
- 2 பச்சை மிளகாய்
- அரை டீஸ்பூன் சீரகத் தூள்
தாளிக்க:
- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கருப்பு கடுகு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 3 வர மிளகாய்
செய்முறை:
- தேங்காய்ப்பால் தவிர சட்னிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சரியான அளவில் எடுத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்க்கவும்.
- பின்னர் ஒரு கப் தேங்காய்ப்பாலை மிக்சி ஜாரில் சேர்க்கவும்.
- அனைத்தும் நன்கு கலக்கும் படி நன்றாக அரைக்கவும். தேவைப்பட்டால் உப்பின் அளவை சரி பார்க்கவும்.
- காரத்தின் அளவை அதற்கேற்ப சரிசெய்து கொள்ளலாம்.
- இந்த சட்னி கொஞ்சம் தண்ணி பதத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். எனவே கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- இந்த சட்னியின் சுவைக்கு அதை தாளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி காய வைக்கவும்.
- எண்ணெய் சூடனத்தில் அதில் கடுகை போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலை மற்றும் வர மிளகாயை சேர்க்கவும்.
- வர மிளகாய் நிறம் மாறியதும் பெருங்காயத்தை சேர்த்து சட்னி மீது கொட்டினால் சுவையான தேங்காய்ப்பால் சட்னி ரெடி!
- இதை சூடான இட்லி, ஆப்பம் அல்லது தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications











