Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
சௌ சௌ தோலை தூக்கி போடுவீங்களா? இனிமேல் அப்படி செய்யாம இந்த மாதிரி சட்னி செய்யுங்க..
Chow Chow Peel Chutney Recipe: இட்லி, தோசை என்று எடுத்துக் கொண்டால், அதற்கு சரியான காம்பினேஷன் சட்னி தான். இதுவரை எத்தனையோ சட்னியை நீங்கள் செய்திருப்பீர்கள். அதில் பெரும்பாலும் செய்யக்கூடிய சட்னி என்று எடுத்துக் கொண்டால், அது தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி என்றாகவே இருக்கும்.
இப்படி தினமும் ஒரு மாதிரியான சட்னியை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் வீட்டில் இதுவரை முயற்சி செய்திராத சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சௌ சௌ காய் உள்ளதா?

அப்படியானால் அதன் தோலை சீவி விட்டு, அதை தூக்கி எறியாமல், அவற்றைக் கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த சட்னி மிகவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது நீங்கள் எதிர்பார்த்த வகையில் வித்தியாசமாகவும் இருக்கும். இந்த சட்னியானது இட்லி தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு சௌ சௌ தோல் கொண்டு எப்படி சட்னி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ தோல் கொண்டு செய்யக்கூடிய சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சௌ சௌ தோல் - 1 கப்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 4- பல்
* புளி - ஒரு சிறிய துண்டு
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு, வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் சௌசௌ காயின் தோலை சேர்த்து 10-12 நிமிடம் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்து கலந்தால், சுவையான சௌ சௌ சட்னி தயார்.
Image Courtesy: swapnaskitchen



Click it and Unblock the Notifications











