Latest Updates
-
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும்
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும்
Chickpeas Potato Masala Recipe in Tamil: இட்லி, தோசைக்குப் பிறகு பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக இருப்பது சப்பாத்தி அல்லது பூரிதான். சப்பாத்தி செய்வதற்கு எளிதானதாக இருப்பதுடன் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. அதனால்தான் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் பிரதான விருப்பமாக சப்பாத்தி உள்ளது.

சப்பாத்தி ஆரோக்கியமானது மட்டுமல்ல சரியான சைடிஷுடன் சாப்பிடும்போது சுவையானதும் கூட. சப்பாத்திக்கு ஆஸ்தான சைடிஷ் என்றால் அது உருளைக்கிழங்கு குருமாதான். ஆனால் அது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. எனவே சப்பாத்திக்கு வேறு சைடிஷ் செய்வதே உங்களின் ஆரோக்கிய தேவையை பூர்த்தி செய்யும். ஆரோக்கியமான சைடிஷ் என்று வரும்போது கொண்டைக்கடலையை வைத்து செய்வது நல்ல தேர்வாக இருக்கும். கொண்டைக்கடலையை உருளைக்கிழங்குடன் சேர்த்து நார்த் இந்தியன் ஸ்டைலில் மட்டன் குருமா போல சூப்பரான சைடிஷை செய்யலாம்.
உங்களுக்கு நார்த் இந்தியன் ஸ்டைல் கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் வேக வைத்த கொண்டக்கடலை
- 1 பெரிய வேக வைத்த உருளைக்கிழங்கு
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 கப் நறுக்கிய தக்காளி
- 2 ஸ்பூன் புதினா
- 2 ஸ்பூன் கொத்தமல்லி
- 1/2 கப் தயிர்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் உப்பு
-1 கப் சுண்டல் வேகவைத்த தண்ணீர்
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 10 முந்திரி பருப்பு
- 1 ஸ்பூன் சீரகம்
தாளிக்க:
- 1 பிரியாணி இலை
- 1 அன்னாசி பூ
- 1 ஜாதிக்காய் இழை
- ½ ஸ்பூன் சீரகம்
- 3 ஏலக்காய்
- 3 கிராம்பு
- 2 இன்ச் இலவங்கப்பட்டை
செய்முறை:
- முதலில் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய், முந்திரி, சோம்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மசாலா பொருட்கள் ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும். அவை பொரியத் தொடங்கியதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி நன்கு குழைந்து மசியும் வரை சமைக்கவும்.
- உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும். பின்னர் புதினா இலைகளைச் சேர்த்து, மணம் வரும் வரை வதக்கவும்.
- பின்னர் தயிர் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை சுண்ட விடவும். அதன்பின் வேகவைத்த கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, சுண்டல் வேக வைத்த தண்ணீர் மற்றும் தேங்காய் விழுதை சேர்த்து கிளறவும்.
- இதை மிதமான தீயில் மெதுவாக கொதிக்க விடவும். மூடி வைத்து, 6 முதல் 8 நிமிடங்கள் வரை, கெட்டியாகி மணம் வரும் வரை கொதிக்க விடவும்.
- கொண்டைக்கடலையும் உருளைக்கிழங்கும் நன்கு வெந்து மென்மையாகும் வரை சமைக்க வேண்டும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்தால் சுவையான நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications