Just In
- 14 hrs ago
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- 18 hrs ago
வார ராசிபலன் (28.02.2021 முதல் 06.03.2021 வரை) – இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப உஷாரா இருக்கணும்..
- 19 hrs ago
இன்றைய ராசிப்பலன் (28.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…
- 1 day ago
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
Don't Miss
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Automobiles
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செட்டிநாடு பூண்டு ரசம்
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது செட்டிநாடு ரெசிபிக்கள். இந்த வகை ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும். செட்டிநாடு ரெசிபிக்களில் அசைவ சமையல் மட்டுமின்றி, சைவ ரெசிபிக்களும் அற்புதமாக இருக்கும். அதிலும் செட்டிநாடு ரசம் ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு சளி பிடித்திருந்தால், செட்டிநாடு பூண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள்.
கீழே செட்டிநாடு பூண்டு ரசம் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/4 கப்
* புளி - 20 கிராம் (1 கப் சுடுநீரில் ஊற வைக்கவும்)
* தக்காளி - 3 (நறுக்கி அரைத்தது)
* நெய் - 1 டேபிள் பூன்
* கடுகு - 1/2 டீபூன்
* சீரகம் - 1/2 டீபூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீபூன்
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீபூன்
* மிளகுத் தூள் - 1/2 டீபூன்
* சீரகப் பொடி - 1/2 டீபூன்
* மல்லித் தூள் - 1-1/2 டீபூன்
* மிளகாய் தூள் - 1 டீபூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீபூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை கழுவி குக்கரில் போட்டு, ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
* பின் ஊற வைத்துள்ள புளியை கையால் பிசைந்து, ஒரு கப் அளவில் புளி நீர் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின்பு தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் சீரகத்தைப் போட்டு தாளித்து, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
* பின் அரைத்த தகிகாளி, புளி நீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். பின்பு அதில் ஒரு கப் அல்லது தேவையான அளவு நீரை ஊற்றி, மிதமான தீயில் நுரைக்கட்டும் வரை சூடேற்றவும்.
* ரசம் ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்தால், சுவையான செட்டிநாடு பூண்டு ரசம் தயார்.
Image Courtesy: archanaskitchen