Just In
- 57 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 2 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
செட்டிநாடு பூண்டு ரசம்
செட்டிநாடு ரெசிபிக்களில் அசைவ சமையல் மட்டுமின்றி, சைவ ரெசிபிக்களும் அற்புதமாக இருக்கும். அதிலும் செட்டிநாடு ரசம் ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக அட்டகாசமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது செட்டிநாடு ரெசிபிக்கள். இந்த வகை ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும். செட்டிநாடு ரெசிபிக்களில் அசைவ சமையல் மட்டுமின்றி, சைவ ரெசிபிக்களும் அற்புதமாக இருக்கும். அதிலும் செட்டிநாடு ரசம் ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு சளி பிடித்திருந்தால், செட்டிநாடு பூண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள்.
கீழே செட்டிநாடு பூண்டு ரசம் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/4 கப்
* புளி - 20 கிராம் (1 கப் சுடுநீரில் ஊற வைக்கவும்)
* தக்காளி - 3 (நறுக்கி அரைத்தது)
* நெய் - 1 டேபிள் பூன்
* கடுகு - 1/2 டீபூன்
* சீரகம் - 1/2 டீபூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீபூன்
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீபூன்
* மிளகுத் தூள் - 1/2 டீபூன்
* சீரகப் பொடி - 1/2 டீபூன்
* மல்லித் தூள் - 1-1/2 டீபூன்
* மிளகாய் தூள் - 1 டீபூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீபூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை கழுவி குக்கரில் போட்டு, ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
* பின் ஊற வைத்துள்ள புளியை கையால் பிசைந்து, ஒரு கப் அளவில் புளி நீர் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின்பு தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் சீரகத்தைப் போட்டு தாளித்து, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
* பின் அரைத்த தகிகாளி, புளி நீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். பின்பு அதில் ஒரு கப் அல்லது தேவையான அளவு நீரை ஊற்றி, மிதமான தீயில் நுரைக்கட்டும் வரை சூடேற்றவும்.
* ரசம் ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்தால், சுவையான செட்டிநாடு பூண்டு ரசம் தயார்.
Image Courtesy: archanaskitchen