Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
பச்சை மிளகாய் இருந்தா இந்த செட்டிநாடு மிளகாய் மண்டியை செய்யுங்க - காரமே இல்லாம சாப்பிட அருமையா இருக்கும்
Chettinad Milagai Mandi Recipe in Tamil: தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானவை. இதற்கு அந்த ரெசிபிக்களில் சேர்க்கப்படும் தனித்துவமான மசாலாக்கள்தான் காரணம். நீங்களும் உங்கள் வீட்டில் வித்தியாசமான செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் இந்த பச்சை மிளகாய் மண்டியை முயற்சி செய்து பாருங்கள். இந்த பச்சை மிளகாய் மண்டி சாதம், சப்பாத்தி, தோசை என அனைத்திற்கும் பக்காவான சைடிஷாக இருக்கும்.

பொதுவாக பச்சை மிளகாய் என்றாலே மிகவும் காரமாக இருக்கும் பலரும் அதை பார்த்தாலே பயந்து ஓடுவார்கள். அதனால்தான் அதை பெரும்பாலும் மக்கள் சமையலில் பச்சை மிளகாயை மிகவும் குறைவாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த பச்சை மிளகாயை வைத்து செட்டிநாடு பகுதிகளில் அட்டகாசமான கிரேவி செய்வார்கள். வித்தியாசமாக சாப்பிட நினைப்பவர்கள் அவசியம் இந்த பச்சை மிளகாய் மாந்தியை முயற்சிக்க வேண்டும்.
உங்களுக்கு செட்டிநாடு பச்சை மிளகாய் மண்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பச்சை மிளகாய் மண்டியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
புளிக் கரைசல் தயாரிக்க:
- 1.5 கப் அரிசி கழுவிய நீர்
- எலுமிச்சை அளவு புளி
குழம்பிற்குத் தேவையானவை:
- 4 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 20 பல் பூண்டு
- 20 சின்ன வெங்காயம்
- 20 பச்சை மிளகாய்
- 2 தக்காளி (தோல் நீக்கி அரைத்தது)
- தேவையான அளவு உப்பு
- 2 தேக்கரண்டி அரிசி மாவு
- 1/4 கப் தண்ணீர்
செய்முறை:
- பெரிய எலுமிச்சை அளவு புளியை 2 கப் அரிசி கழுவிய நீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். புளி ஊறிய பிறகு, நன்றாகப் பிசைந்து அதிலுள்ள சாறு முழுவதையும் எடுத்து தனியாக வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைக்கவும். தக்காளியின் மேல் பகுதியில் லேசாக கீறி, 3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, நீரை வடித்துவிட்டு தக்காளியின் தோலை நீக்கவும். பின்னர் தக்காளியை மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும், பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, அவை நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்துக் கிளறவும். தக்காளி வெந்து, அதிலுள்ள ஈரப்பதம் வற்றிச் சுருளும் வரை வதக்கவும்.
- பிறகு உப்பு மற்றும் புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
- அடுப்பை அதிக தீயில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியாகத் தொடங்கும் வரை கிளறவும்.
- 10 நிமிடங்களுக்குப் பிறகு, குழம்பு ஓரளவு கெட்டியான பதத்தில் இருக்கும். ஒருவேளை குழம்பு மிகவும் தண்ணியாக இருந்தால், கால் கப் தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் அரிசி மாவை கரைத்து குழம்பில் சேர்க்கவும்.
- குழம்பு கெட்டியாகும் வரை ஓரிரு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- அவ்வளவுதான் செட்டிநாடு பச்சை மிளகாய் மண்டி ரெடி. இதை சூடான சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
