Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
Kadamba Chutney Recipe : செட்டிநாடு கதம்ப சட்னி
உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யும் போது ஒரே மாதிரியான சட்னி செய்யாமல், சற்று வித்தியாசமாக சட்னி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்பெஷல் கதம்ப சட்னி செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யும் போது ஒரே மாதிரியான சட்னி செய்யாமல், சற்று வித்தியாசமாக சட்னி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்பெஷல் கதம்ப சட்னி செய்யுங்கள். இந்த கதம்ப சட்னி இட்லி, தோசை, வெண் பொங்கல் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். மேலும் இந்த சட்னியை சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். அதோடு இந்த சட்னியை செய்வது சுலபம்.

உங்களுக்கு செட்டிநாடு கதம்ப சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கதம்ப சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* இஞ்சி - 1/4 இன்ச்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* புதினா - 1/4 கப்
* கொத்தமல்லி - 1/4 கப்
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 சிறிய துண்டு
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, வெங்காயம், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு தேங்காய் மற்றும் புளி சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து இறக்கி, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான செட்டிநாட்டு கதம்ப சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications